பொதுத் தேர்வு நடந்துகொண்டிருப்பதால் மதியம்தான் இவனுக்கு பள்ளி. அடுத்த வருடம் இதே நேரம் இவனும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிக்கொண்டிருப்பான். எட்டு மணி அளவில் அம்மாவும் அப்பாவும் வேலைக்கு கிளம்ப, தினசரி படித்து முடித்து, விவித் பாரதியின் காலை நேர தமிழ் ஒலிபரப்பு சேவை பத்து மணி அளவில் நிறைவுறும்போது தெரு அடங்கி விட்டது. இனி இரவில்தான் மீண்டும் தேன்கிண்ணம் கேட்க முடியும்.
இயற்பியல் பாடத்தை புரட்டிப் பார்க்கலாம் என்று புத்தகத்தை எடுத்தவன் வெளியே போய் படிக்கலாம் என்று மாடிப் படிக்கட்டில் அமர்ந்தான். பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து சுற்று முற்றும் பார்த்தவன் கண்ணில் பின்புறமிருந்த வீட்டின் கிணற்றடியில் இவன் வயதையொத்த பெண் அமர்ந்தபடி குளித்துக் கொண்டிருந்தது பட்டது. சட்டெனப் படிக்கட்டினுள் தலையை குனிந்து, பின் மீண்டும் எட்டிப் பார்த்தவனுக்கு அவர்கள் வீட்டு குளியலறையை உபயோகிக்க முடியாதபடி வெளிய குளிக்க ஏன் நேர்ந்தது என்பதுதான் முதலில் தோன்றியது. அவள் செயல்களில் எந்த அவசரமோ யாரேனும் தன்னை கவனிக்கக்கூடும் என்ற பதற்றமோ இருந்தது போல் தெரியவில்லை. அவ்வீட்டின் புழக்கடையில் நடப்பட்டிருந்த பவழ மல்லி, செவ்வரளிச் செடிகள், வாழை , தென்னை மரங்கள் இயல்பான நிழல் படர்ந்த மறைவை ஏற்படுத்தி இருந்ததும், இந்த நேரத்தில் பொதுவாக யாரும் வெளியே வருவதில்லை என்பதும் அவளுக்கு வெளியே குளிக்க தைரியம் அளித்திருக்க வேண்டும். இவனேகூட இந்த இடத்தில் அமராமல் சில படிக்கட்டுக்கள் மேலோ கீழோ அமர்ந்திருந்தால் அவளைப் பார்த்திருந்திருக்க முடியாது. தினமும் காலை ஏழு, ஏழரை மணி அளவில் அந்த வீட்டிலிருந்து ஒருவர் பல் துலக்கியபடி கர்ண கொடூரமான குரலில் வாய் கொப்பளிக்கும் சப்தங்கள் எழுப்புவதையும் அந்த தினசரி சடங்கை எதிர்பார்த்திருந்து இவன் வீட்டில் கிண்டலடிப்பதும் மட்டுமே இங்கு குடி வந்த ஒரு வருடத்தில் பின் வீட்டை பற்றி அறிந்திருந்த அவனுக்கு அங்கு ஒரு பெண் இருப்பதே இப்போதுதான் தெரிந்தது.
இவன் பார்வையில் படும் போது குளித்து முடித்திருந்தவள் மார் வரைச் சுற்றியிருந்த பாவாடையை கீழிறக்கியபடி எழுந்தாள். இறுதியாக ஒரு கையால் தலையில் நீரை ஊற்றி , மற்றொரு கையால் முகத்தில் வழியும் நீரை நளினமாக துடைத்துக்கொள்ள, நீர் அவள் உடலில் வழுக்கிச் சென்றது. மரங்களில் இலைகளின் நடுவே ஊடுருவிய ஒளியில் அவளுடலில் நீர்த் துளிகள் துல்லியமாக தெரிந்தன ஒல்லியான உடல், முதிரா மார்பகங்கள், இன்னும் வடிவம் கொள்ளாத இடை சராசரி நீளத்திலான கேசம் முதுகிலும், கன்னங்களிலும் ஒட்டியிருந்தது. ( பெரியவனாக ஆனபின் இந்த சம்பவத்தை அவன் நினைவு கூரும்போதெல்லாம் மரங்கள் சூழ்ந்த அமைதியான அந்த இடமும், அவளின் உடலசைவுகளும் அவளை வனயட்சியுடன் தொடர்புபடுத்தச் செய்தன. இயல்பான சம்பவமொன்றை பால்ய கால பூதக்கண்ணாடியின் மூலம் பார்ப்பதால் உருவாகும் மிகையுணர்ச்சி அது என்று அவன் உணர்ந்தாலும் , அப்படி உருவகிப்பதே அன்று மட்டுமே பார்த்த, முகம் மறந்துப் போன அந்தப் பெண்ணின் நினைவுக்கு தான் செய்யும் நியாயமாக இருக்கும் என்றும் நினைத்தான).
அவள் உடலை துவட்டிக் கொண்டிருப்பதை கவனித்துக்கொண்டிருந்தவன் வேறு யாரேனும் பார்க்கிறார்களா என்று அருகிலிருந்த வீடுகளை பார்த்தான். யாரும் இருப்பது போல் தெரியவில்லை. கூடப் படிக்கும் பெண்களின் காதோர, கணுக்கால் மென் முடிகள், ஜடையை முன்னால் தழைய விட்டு நீவியபடி பேசுவது , தோழியுடன் பேசத் திரும்பும் போதான கழுத்துச் சொடுக்கல், சைக்கிளில் பயணிக்கும்போதும், இறங்கும்போதும் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்திற்கு மேலேறும் அவர்களுடைய சீருடை ஸ்கர்ட், அவனை இன்னும் சிறுவன் என்றே நினைத்து தங்களின் ஆடை விலகல்கள் குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளாத அவனை விட மூத்தப் பெண்கள் எனச் சில வருடங்களாகவே அவனுள் பெண்ணுடல், அதன் அசைவுகள் குறித்த குறுகுறுப்பும், அலைக்கழிப்பும் ஏற்பட்டிருந்தாலும் ஆடையின்றி ஒரு பெண்ணை இப்போது தான் பார்க்கிறான். உள்ளே சென்று விடலாமா என்று யோசித்தவனுக்கு இனி தன்னால் படிக்க முடியாது என்பது மட்டும் தெரிந்தது.
வீட்டு வாசலில் சைக்கிள் நிறுத்தப்பட்டு கேட் திறக்கப்படும் ஓசை கேட்டது. “என்னடா படிக்கற” என்று கேட்டபடி சுந்தர் வர “பிசிக்ஸ்டா” என்றபடி எழுந்து சுந்தரை உள்ளே அழைத்தான். ” படிக்கட்டிலேயே கொஞ்ச நேரம் ஒக்காரலாமேடா ” என்ற சுந்தரிடம், “இல்லடா வெயில் அதிகமாறது, உள்ளயே போலாம்” என்றான். சுந்தர் வந்தது ஒரு விதத்தில் எரிச்சலாக இருந்தாலும், இக்கட்டிலிருந்து மீட்ட உணர்வையும் தந்தது. உள்ளே சென்று சோபாவில் அமர்ந்தார்கள்.
“இன்னிக்கும் கம்ப்யூட்டர் ஸார் வர மாட்டார்டா, எங்களுக்கு ஒரு பீரியட் ப்ரீ ” என்றான் சுந்தர்.
“ஏன்டா நான் என் கம்ப்யூட்டர்லேந்து பேங்க்ல இருக்கற இன்போர்மேஷலாம் பாக்க முடியுமாடா?” எத்தனாவது முறை இதை அவன் கேட்கிறான் என்பது அவனுக்கும் சரி சுந்தருக்கும் தெரியாது. மருத்துவம் படிக்க வேண்டுமென்றெல்லாம் பெரிய ஆசை இல்லாதிருந்தாலும், பெரும்பாலானோரைப் போல உயிரியல் க்ரூப்பையே இவன் தேர்ந்தெடுத்திருந்தான். கம்ப்யூட்டர் பற்றியும் கூட பெரிய ஆர்வமில்லாவிட்டாலும், அது குறித்த அதீத கற்பனைகள் அவனுக்கு இருந்ததால் அந்த க்ரூப்பை தேர்வு செய்திருந்த சுந்தரிடம் அது குறித்து கேட்டுக் கொண்டிருப்பான்.
“எல்லாம் முடியும்” என்று சுந்தரும் வழக்கம் போல் சலிக்காமல் பதில் சொன்னான்.
“அப்போ ஈஸியா பேங்க் பணத்த லவுட்டலாம்ல”
“அதாண்டா கம்ப்யூட்டர், ஆனா ஒழுங்கா கத்துக்கணும்”
“உங்க சிலபஸ் வேற ரொம்ப கம்மியா இருக்குடா , நூறு பக்கம் கூட இல்ல, பேசாம இந்த க்ரூப்ப எடுத்துருக்கலாம்”
“எல்லாம் ஏழெட்டு ப்ரோக்ராம்தான்”
“என்னடா பேரு வெச்சிருக்காங்க பேசிக், இன்னொன்னு என்ன கோபால்னு நம்ம ஊர் பேரு மாதிரி”
“அத்த வுட்றா, இத்த கேளு சூப்பர் மேட்டர், நம்ம மணி இருக்கான்ல அவன் சுஜாதாவ பாக்கறான்”.
“என்னடா சொல்ற”.
“ஆமாண்டா நேத்து கம்ப்யூட்டர் ஸார் வரலல, இவன் கம்ப்யூட்டர் ரூம்ல ஏதோ சீரிஸா எழுதிட்டிருந்தான், என்னடான்னு பாத்தா அவ பேரையும், இவன் பேரையும் வெச்சு ‘ப்ளேம்ஸ்’ ஆடிட்டிருக்கான்”
தன் பெயர் மற்றும் பிடித்தமான பெண்ணின் பெயரை எழுதி இரண்டிலும் உள்ள ஒரே அட்சரத்தை நீக்கிக் கொண்டே வந்து இறுதியில் மிஞ்சியிருப்பதை வைத்து அப்பெண்ணுடன் தனக்கு எந்த வகையான உறவு ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளும் – ஏழாவது, எட்டாவது படிக்கும் போது பிரபலமாக இருந்த – விளையாட்டை இப்போதும் மணி ஆடிக்கொண்டிருக்கிறான் என்பது ஆச்சரியம் தான். (மீரா மற்றும் உமாவுடன்) சுஜாதா மேலும் இவனுக்கும் – தான் அவர்களை பார்க்கிறோம் என்பது யாருக்கும் தெரியப்படுத்தாமல், பெண்கள் குறித்து அலட்டிக் கொள்ளாதவன் என்ற பிம்பத்தை இவன் காப்பாற்றி வந்திருக்கிறான் – ஈர்ப்பு உண்டு என்பதால் மணி மீது கொஞ்சம் எரிச்சலும் ஏற்பட்டது. சுஜாதாவுடன் ப்ளேம்ஸ் விளையாட்டில் தனக்கு என்ன உறவு வந்தது என்று சட்டென்று நினைவுக்கு வரவில்லை, சுந்தர் சென்றவுடன் அதை ஆடிப்பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தான்.
“அவ பயாலஜி க்ரூப் ஆச்சேடா”
” மத்த பீரியட்லாம் க்ளாஸ்ல ஒண்ணாதானேடா இருக்கோம், அவ ஒண்ணும் இவனல்லாம் எதுவும் கண்டுக்க மாட்டா’ என்று சுந்தர் சொன்னது கொஞ்சம் ஆறுதலாக இருந்தாலும் ஒருவேளை சுந்தரும் அவளை பார்க்கிறானோ என்றும் தோன்றியது. சுந்தரென்றால் பரவாயில்லை விட்டுக்கொடுக்கலாம் என்று நினைத்துகொண்டான். உமா மற்றும் மீரா இருக்கிறார்களே.
“அவன் ரேவதிய பாக்கறான்னு நெனச்சேன் ” என்றான் சுந்தர்.
ரேவதி குறித்து அவனுக்கு அபிப்ராயம் எதுவும் இல்லையென்றாலும் ‘பெண்’ குறித்து அவனுக்கு அப்போதிருந்த மனநிலையில் அவளின் உருவம் முதல் முறையாக அவனை கிளர்த்தினாலும், அசௌகர்யமாகவும் இருந்தது. ‘பெண்கள்’ தவிர வேறெதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைத்தவன் “ஒங்க வீட்ல கேபிள் போடறது என்னடா ஆச்சு” என்று சுந்தரிடம் கேட்டான்.
” அடுத்த மாசத்துலேந்து கேபிள் போடறங்கடா, மாசம் அம்பது ரூபா, சாங்காலம் ஆறரைலேந்து சன் டி.வி, ராஜ் டிவி உண்டு, அப்பறம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல். “
“பரவாயில்ல அடுத்த வருஷம் ஒனக்கு பப்ளிக் எக்ஸாம்னாலும் போட்டுட்டாங்க”
“தினமும் காத்தால ரெண்டு தமிழ் படங்க போடறாங்களாம், புதுப் படங்க கூட போடுவாங்களாம் அதனாலத்தான்னு நெனக்கறேன். எப்படியோ வீட்ல அப்பாம்மா இருந்தாங்கன்னா நான் பாக்க சான்ஸ் கெடையாது, யாரும் இல்லேனா ஸ்போர்ட்ஸ் சேனல் பாக்கலாம் “
“இங்க கொஞ்சம் ட்யூன் பண்ணா அடுத்த போர்ஷன் கேபிள் ரொம்ப பொறி பொறியா தெரியுது, அதுக்கு பாக்காமையே இருக்கலாம் கண் வலியாவது இல்லாம இருக்கும்”. அடுத்த போர்ஷன் என்றதுமே இன்று முதல் முறையாக பார்த்த பின் வீட்டுப் பெண் மீண்டும் நினைவுக்கு வந்து சங்கடப்படுத்த கால்களை மடித்து உட்கார்ந்தவன், “கருத்தம்மா பாட்டு கேக்கலாம்டா ” என்றான்.
பாடல்களைக் கேட்டுக்கொண்டே, ஆட ஆரம்பித்த ஐந்து ஆறு வருடங்களில் கவாஸ்கரின் இடத்தை நிரப்பிய சச்சின் சமீபத்திய தொடரில் நிகழ்த்திய சாகசங்கள், அடுத்த வருட பாடங்களை எப்போதிலிருந்து படிக்க ஆரம்பிக்க வேண்டும் போன்றவற்றை பேசித் தீர்த்து பள்ளிக்கு தயாராக சுந்தர் கிளம்பிச் சென்றவுடன் மீண்டும் படிக்கட்டு அருகே சென்று பின் வீட்டின் கிணற்றடியை பார்த்தான். யாருமில்லை. அவள் குளித்ததற்கு தடயங்களாக கிணற்றடியின் ஈரமும், சோப்பின் நுரை கலந்த கழிவு நீரும் இருந்தன. அங்கேயே பார்த்துக்கொண்டிருந்தால் அவள் உருவம் மீண்டும் அங்கு தோன்றக் கூடும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இத்தகைய நேரங்களில் இடுப்புக்குக் கீழ் உருவாகும் இறுக்கம் இப்போதும் ஏற்பட உடல் எடை கொண்டது போல் தோன்றியது. மெல்ல நடந்து வீட்டிற்குள் சென்றான். இம்மாதிரியான மனநிலையில் என்ன, எப்படிச் செய்தோம் என்றெல்லாம் பள்ளியில் நண்பர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறான் என்றாலும் அவர்கள் அந்த செயலுக்கு சூட்டிய பெயரை உச்சரிப்பதுகூட அவனுக்கு தவறொன்றை செய்கிறோம் என்ற கூச்சத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே இருந்தது. வீட்டில் அங்குமிங்கும் நடப்பது , மனதில் உள்ளதற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத வேறொன்றைக் குறித்து யோசிப்பது என வழக்கமாக அவனுக்கு உதவும் உத்திகள் இன்று உதவவில்லை. கட்டிலில் சென்று அமர்ந்தவன் தன்னிச்சையாக குப்புறப்படுத்து தன் உடலின் மீது கட்டுப்பாட்டை இழந்தான்.
கிணற்றடியில் பார்த்தவள், பள்ளி சீருடையில் சுஜாதா, மீரா , உமா , அடுத்த போர்ஷனில் வசிக்கும் சுந்தரி அக்கா – அக்கா எப்படி, ஏன் என்று குற்றவுணர்ச்சி கொள்ளக் கூட அவகாசம் இல்லாமல் – என பலர் மனதில் உருக்கொண்டு கரைந்தார்கள். சில நிமிடங்கள் கழிந்தபின் வாயிலிருந்து எச்சில் தலையணையை நனைத்திருக்க தொடைகளின் இடுக்கில் கொழ கொழவென ஒட்டிக்கொண்டிருந்தது. சற்றே மூச்சிரைக்க, உடலில் இன்னும் சிறு அதிர்வு இருந்தது. அனிச்சையாக மூடியிருந்த கண்களை திறக்க முதலில் எதுவும் விழிகளில் தங்கவில்லை. கையை உள்ளே நுழைத்து பிசுபிசுப்பை தொட்டு முகர இதுவரை அறிந்திராத மணம். திரும்பிப் படுக்க முயன்றபோது கால்கள் தொளதொளவென வலுவிழந்து இருக்க உடனடியாக எழ முடியாது என்று புரிந்தது.
அச்செயல் அவன் கற்பனை செய்திருந்தது போல அவனை அருவருப்பானவனாக உணரவைக்கவில்லை. மாறாக இடுப்பின் இறுக்கம் தளர்ந்திருக்க மனதில் முற்றிலும் புதிய பரவசமும், பூரண நிறைவும் பரவியிருந்தது. விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தவனுக்கு ஆபத்தான எல்லையொன்றை வெற்றிகரமாக கடந்து பெரிய மனிதனானது போன்ற உணர்வு. இப்போது நடந்தது அவனுக்கே மட்டும் உரியதான அந்தரங்கமான அனுபவமாகவும் அதே நேரம் இதை குறித்து யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டியதாகவும் தோன்றியது. மதியம் பள்ளியில் சுந்தரிடம் இதை பற்றி சொல்லலாமா, அவன் என்ன நினைப்பான் என்று யோசித்துக்கொண்டிருந்தான். பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து எழுந்து முகம் கழுவி பள்ளிக்குச் செல்ல தயாராக சீருடையை அணியும் போது உள்ளாடையில் கெட்டி தட்டி படிந்திருந்த கறையை பார்த்தவனுக்கு அதுவரை இருந்த உற்சாகமனைத்தும் வடிந்து வீட்டிற்கு தெரியாமல் அதை எப்படி அகற்றுவது என்ற கவலை ஏற்பட்டது.
இள வயதின்……அழியாத கோலங்கள்……..நோட்….கோலங்கள்….☺☺☺