சில்க் போர்டு டிராபிக்கில்
சிக்கிகொண்ட பூனை ஒன்று
கார் போனட் மேல் ஏறியது
காரில் அமர்ந்திருந்த ஐடி தம்பதியைப் பார்த்து
“இன்னிக்கி ஜாம் அதிகம்
நடுவுல ரெண்டு மாடு வேற படுத்திருக்கு
இதுங்களுக்கு வெவஸ்தையே இல்லை”
என்று கூறிவிட்டுச் சென்றது
சற்று நேரம் கழித்து
இரண்டு மாடுகள் காரை தாண்டி சென்றன
தம்பதியை பார்த்த காளை மாடு-
“என்ன முறைக்கறீங்க
எங்களுக்கும் ஜாம்தான்”