கண்ணாடியிலிருந்த
பறவையின் தவறி விழும்
சிறகுகளிலிருந்து
சிறுசெடியென அதே
கண்ணாடி
பிரதிபலிப்பிற்குள்
விழுகிறேன்.
பிரதிபலிப்பிற்குள்ளிருந்து
பெருஞ்செடியாக
அல்லாமலும் சிறுகாளான்
சூழாமலும் விதையென
வான் நோக்கி
முளைக்கிறேன்.
பிரதிபலிப்பிற்கு வெளியே
விழும் என் நிழலில்
செடிகளும் காளான்களும்
மரங்களும்
இளைப்பாறுகிறது.