குளிர்ந்தசைந்த
நதியின் நீரள்ளி
ஓம குண்டத்தின் முன்
கண்கள் கலங்கி
மாப்பிண்டங்களில்
மலர்களிட்டு
கால்கள் சகதியில் கூச
இடுப்பளவு நீரில்
காசி காசி என புலம்பி
மார்புநுால் களைந்து
முங்கி எழ
கரைந்தமிழ்கின்றன
முன்னோர்களின்
பசித்துக்களைத்த முகங்கள்