திளைத்தல்

ஸ்ரீதர் நாராயணன்

அம்மாவின் தோளில் தொற்றியபடி
நீரில் துழாவிச் செல்கிறான்
குளத்தின் ஆழப்பகுதி நெருங்க
கிலேசமும் உவகையுமாக
கூக்குரலிடுகிறான்.
தனக்கென ஓர் உலகு கொண்ட
தனித்துவ சிறுவன்..

அவனுக்கு எட்டாத இன்னொரு உலகு
அடுத்த தடங்களில் இயங்குகிறது.

விசிலோசைக்கு ஏற்ப
இராணுவ ஒழுங்கோடு
படபடத்தப்படி போகின்றன
நீரில் தத்தளிக்கும்
பட்டாம்பூச்சிகள்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.