கரைதல் – ஸ்ரீதர் நாராயணன் கவிதை

– ஸ்ரீதர் நாராயணன் –

தேன்துளிகளை உப்புக்கரைசலை
கருப்பஞ்சாற்றை திராவகத்தை
கொட்டிவிட்டுப் போகிறது
நிறையாத கோப்பையினுள்

வெட்டும் மின்னலொன்று இறங்கி
கோப்பையை உடைத்துவிட்டு
விட்டுச் செல்கிறது
பற்றிப் பெய்யும் பெருமழையை

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.