ஏ. கே. ராமானுஜன் கவிதையின் தமிழாக்கம்- ‘பதைபதைப்பு’ – நம்பி கிருஷ்ணன்

நம்பி கிருஷ்ணன்

பீதிமரத்தின் கிளையில்லாமை அல்ல,
அப்பட்டமான வேர்களும் ரகசியமான சுள்ளிக்கிளைகளும் அதற்குண்டு.
நம்பிக்கை பரவளையங்களின் வடிவியல் நேர்த்தி அல்ல,
உச்சியில் என்னையே முடிச்சாக கொண்ட
முடியப்படா தளர்நுனிகள் அதற்குண்டு.

கள்ளச் சந்திப்பின் குதூகலத்துடன் விரையும் நீரின் விழிப்புணர்வு அல்ல,
கரிப்பிசின் இழைமையுடன் தூக்கக்கலக்கத்தில் பிசுபசுக்கும்
வெள்ளரவுக் கண்ணாடிப் பாதைகள் அதற்குண்டு.

தீநாக்கின் சுவாசப்பைகள். நீரின் கண்கள்.
நிலத்தின் என்புத்தசை. காற்றின்
புலனாகா புறாக்களின் கூட்டம்.
                                 ஆனால் பதைபதைப்பிற்கோ
தன்னைப் போக்கிக்கொள்ள ஒரு உருவகம்கூட கிடையாது.

(This is an unauthorised translation of the poem, “Anxiety” by A.K. Ramanujan. This Tamil translation is intended for educational, non-commercial display at this particular webpage only).

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.