விடிந்த காலைப்பொழுதுகள் எல்லாம் உட்சாகம் என்கிறீர்கள்.
மாலைகள் எல்லாம் ஓய்வைப் பறைசாற்றுகின்றன என்கிறீர்கள்.
நிசப்த இரவுகள் எல்லாம் மயான அமைதியின் குறியீடென்கிறீர்கள்.
மழை வானமெல்லாம் மனதிற்கு இதம் என்கிறீர்கள்.
கோடைகளெல்லாம் கொடுந்துயர் என்கிறீர்கள்.
வாடைகளெல்லாம் வறுமை என்கிறீர்கள்.
இறுதியில் இறப்புதான் பேரமைதி என்கிறீர்கள்.
இதில் எந்தச் சூழ்நிலைதான் வாழ்தலைச் சொல்கின்றது?
அனைத்தும் என்றால், இவை அனைத்து நிலையிலும் அவளின் நோய்மையின் வலிகளும், சிகிச்சைக்கான பயணமும் மாத்திரம்தானே எஞ்சியிருக்கின்றன.