புஷ்பால ஜெயக்குமார்
மழை ரகசிய ஒப்பந்தத்தில்
காற்றோடு கலந்து வீசியது
மின்னல் தாக்குவது தெரியாமல்
பேயாட்டம் ஆடியது மரம்
கரிய மேகங்களின் அடர்த்தி
யாருக்கும் தெரியாமல்
போகும் நேரம்
இருள் கூடியது வானம்
நான் மட்டும்
நனைவது போல்
நடந்து போனேன்
தெரு நாய் ஒன்று
என்னோடு நடந்து வந்தது
யார் கண்ட கனவு இது
யார் எடுத்த புகைப்படம் இது
யார் வரைந்த ஓவியம் இது
ஒரு நாள் இருப்பேன்
அந்த வானத்தின் கீழ்
மரத்தின் நிழலில்
மழையின் ஞாபகத்தில்
நான் நின்று இருப்பேன்