சுசித்ரா மாரன்
ஊடலின் சுவர்கள்
மௌனத்தின் நீர் உறிஞ்சி
கடினப்படுகின்றன
நக்கிக் கரைக்கும்
நாய்க்குட்டி அன்பின்
வால் நறுக்கிய வள் வள் சொல் கூட
சுவரின் அங்கம் தான்
கனிகவர் திறனற்ற சொற்கள்
உடைபடும் பிரியத்தின் கையறு சாட்சிகள்
ஏதும் இயலா இச்சொற்களின் தகனத்தில்
தீப்பாய்ந்து ஏதுமற்றுப்போன நேசம் தான்
முன்பு எல்லாமுமாய் இருந்ததும்