“மாமி இங்க வாங்கோ. சீக்கிரம் வாங்கோ” என்று மீனா மாமியின் குரல் கேட்டது.
“என்ன ஆச்சோ. மாமி இப்படி கத்தறா” என்று கூறிக்கொண்டே அம்மா முன் பக்கம் சென்றாள். நானும் அம்மாவுடன் சென்றேன். நாங்கள் அப்போது சிகந்திராபாத் நியூ போயிகுடாவில் ஒரு பெரிய வீட்டின் பின்பக்கத்தில் குடியிருந்தோம் பத்மநாபா மாமாவும் முன் பக்கத்தில் இருந்தார்கள். அவர்கள் இந்த வீட்டிற்கு சொந்தக்காரர்கள்.
“என்ன ஆச்சு மாமி?” என்று அம்மா மீனா மாமியைக் கேட்டாள்.
“பாம்பு வந்திருக்கு மாமி”
“பாம்பா? எங்க?”
“அதுக்குள்ள இருக்கு,” என்று மீனா மாமி வாட்டர் மீட்டர் இருக்கும் குழி பக்கம் கை காட்டினாள். வாட்டர் மீட்டர் இரண்டடிக்கு இரண்டடி சதுர, பக்கவாட்டில் சிமெண்ட் பூசப்பட்ட குழிக்குள் இருக்கும். அந்தக் குழியின் மேல் சதுரமான தகர மூடி இருக்கும். அது சரியாக\ குழியின் மேல் உட்காராததால் குழிக்கும் மூடிக்கும் நடுவிலிருந்த இடைவெளி வழியாக பாம்பு உள்ளே சென்றுவிட்டது, (more…)


