எஸ். சுரேஷ்

கவியின் கண் – அன்னிய வானின் கீழல்ல

எஸ். சுரேஷ்

அன்னிய வானின் கீழல்ல
அன்னிய சிறகுகளின் நிழலில்ல-
இவையனைத்தையும் என் மக்களுடன் பகிர்ந்து கொண்டேன்
இங்கே, தீவினை எம்மைக் கைவிட்ட இடத்தில்
– அன்னா அக்மதோவா

சில நாட்களுக்கு முன்னர் நாம் சுதந்திர தினத்தைக் கொண்டாடினோம். அப்போது ஊடக கட்டுரைகளிலும் சமூக ஊடகச் சிற்றுரைகளிலும் இருவேறு தீவிர குரல்களைக் கேட்க முடிந்தது. ஒரு முனையில், தேசபக்திக் கட்டுரைகள்- நாம் ஏன் உலகின் தலைசிறந்த நாடாக விளங்குகிறோம் என்று. மறுமுனையில், நம்பிக்கையற்றவர்கள்- நமக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதா என்ற சந்தேகத்துடன், நம் சமூகத்தில் உள்ள தீமைகள் அனைத்தையும் பட்டியலிட்டு இவையே இந்தியாவின் சாதனைகள் என்ற குற்றச்சாட்டு (வழக்கம் போலவே உண்மை இவை இரண்டுக்கும் நடுவில் எங்கோ இருக்கிறது).

ஒரு வகையில் நாம் அதிர்ஷ்டக்காரர்கள் – நம் எதிரி யார் என்பதை நாம் அறிந்திருந்தோம். நம்மை ஆக்கிரமித்திருந்தவர்கள் பிரிட்டிஷார், அவர்களை விரட்டிவிட்டால் சுதந்திரம் கிடைத்துவிடும் என்று நம்பினோம். ஆனால் இதற்கு மாறாக, உலகின் பல நாடுகளும் வேற்று எதிரியை அடையாளம் காண முடியாத காரணத்தால் அடிமைத்தளையில் அவதிப்பட்டன. அவர்களின் எதிரி உள்ளிருந்தான். சர்வாதிகாரி, கொடுங்கோலன், பாசிஸ்டு என்று எப்படி அழைத்தாலும் அவன் அந்நாட்டு குடிமக்களில் மக்களில் ஒருவன். இவர்களில் பலர் மக்களின் ஒருமித்த ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றியவர்கள். இது போன்ற ஓர் அதிகார அமைப்புடன் கடுமையாகப் போராடினாலன்றி விடுதலை பெறுதல் அரிது.. (more…)

ஜென்

எஸ். சுரேஷ்

Buddha Hussainsagar

ஹுசைன் ஸாகர் ஏரிக்கரையில்
கல் பெஞ்சில் உட்கார்ந்து
பிரும்மாண்டமான புத்தன் சிலையைப் பார்த்து
கவிதை எழுத யத்தனிக்கிறான் கவிஞன்-
புத்தனோ மெளனம் பாவிக்கிறான்,
இவனுக்கோ கவிதை வரவில்லை
காகிதத்தைக் கிழித்துக் கிழித்து வீசுகிறான்

கிழித்துப் போட்ட காகிதங்களை
மென்று கொண்டிருக்கும் கிழக்கழுதையொன்று,
“அந்த மூணாம் கவிதை ருசியாக இருந்தது,” என்கிறது

அதை முறைத்துப் பார்த்துவிட்டு
மறுபடியும் புத்தனை பார்க்கிறான் கவிஞன்,
புத்தன் எப்பொழுதும் போல் மெளனமாய் நிற்கிறான்
“சீக்கிரம் கவிதை எழுது. எனக்கு பசிக்கிறது,”
என்று அவசரப்படுத்துகிறது கழுதை

கழுதையை முறைக்கிறான் கவிஞன்,
கவிஞனை முறைக்கிறது கழுதை
இருவரையும் மெளனமாய்க் கூர்ந்து
நோக்கிக் கொண்டிருக்கிறான் புத்தன்

 

கோட்டோவியம் : சேது வேலுமணி

திரும்பி வந்தவன்

எஸ். சுரேஷ்

காலை ஆறு மணி. வழக்கம் போல் வாக்கிங் கிளம்பினேன். எங்கள் அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸில் உள்ள கட்டிடங்களை ஒரு மணிநேரம் பல முறை சுற்றி வருவது வழக்கம். நடக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்திற்க்கெல்லாம் எதிரில் வெங்கடேஸ்வர் ராவ் தோன்றினார். “ஹலோ சார்?” என்று விசாரித்தார். எனக்கு அவரை பார்த்ததில் ஒரே ஆச்சரியமாக இருந்தது. சுமார் இரண்டு வருடங்கள் கழித்து அவரை மறுபடியும் பார்க்கிறேன்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு வெங்கடேஸ்வர் ராவ் தன் மனைவி ராஜி என்று அழைக்கப்படும் ராஜேஸ்வரியையும் பன்னிரண்டு வயது பெண் குழந்தையும் (அவள் பெயர் மாலினியோ ஷாலினியோ) விட்டுவிட்டு வேறொரு பெண்மணியின் வீட்டிற்குச் சென்றுவிட்டார். அந்தப் பெண்ணை இவர் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும், அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருப்பதாகவும், ராவ் ராஜியை கூடிய சீக்கிரமே விவாகரத்து செய்துவிடுவார் என்றும் அரசல்புரசலாகக் கேள்விப்பட்டேன். (more…)

பறவை

எஸ். சுரேஷ்

ஒரு மரத்தின் கீழ் உட்கார்ந்துக்கொண்டு
கவிதை எழுதத் தொடங்கினேன்
“உன் முகத்தைப் பார்த்தால் தாமரை மலரும்
உன் பாதம் பட்டால் பூக்கள் மலரும்
நீ கண் இமைத்தால் பட்டாம்பூச்சிகள் பறக்கும்
நீ சிரித்தால் மின்னலடிக்கும்
உன் கொலுசொலி கேட்டு வானம் உறுமும்
உன் வளையல் ஓசை என் மனதை மயக்கும்
உன் குரலைக் கேட்டால் குயிலும் நாணும்..”

ஹ ஹ ஹ ஹ என்று மரக்கிளையில் உட்கார்ந்து
என் கவிதையை படித்துக்கொண்டிருந்த குயில்
சிரித்துவிட்டுப் பறந்து சென்றது

கடைசி வரியை அழித்துவிட்டு
“நீ என்னுடன் இருந்தால் என்றைக்கும் இனிக்கும்”
என்று முடித்தேன்

ஒளிப்பட உதவி – steffichfineart.com

அமைதி பள்ளத்தாக்கு பயணம்

எஸ். சுரேஷ்

sv3

“பிரும்மாண்டமான கருநாகம் ஒன்று சொன்ன நேரத்திற்கு அந்த கற்கள் பின்னாலிருந்து வெளியே வரும். இங்கு அதற்காக அவர்கள் வைத்திருக்கும் பாலைக் குடித்துவிட்டு மறுபடியும் அந்த கற்களுக்கு பின்னால் சென்று மறையும்”.

இதைக் கேட்டதும் நாங்கள் இரண்டடி பின்னகர்ந்தோம். பாம்பு ஒன்றும் அங்கு கண்ணில் படவில்லை.

எங்களுக்கு இதைச் சொல்லிக் கொண்டிருந்தவரின் பெயர்தான் ‘பேபி’, அவரோ அறுபது வயது தாண்டியவர். மலையாளமும் தமிழும் கலந்து பேசினார். கறுத்த நிறம். முறுக்கிய தசைகள். உழைப்பாளியின் உடல்கட்டு. இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த நாடோடிகள் நடத்தும் ஒரு விழாவை விவரித்துக் கொண்டிருந்தார்.

“அப்படி வராவிட்டால்?” என்று ஹரிணி கேட்டாள். அவளுக்கு எப்பொழுதும் எல்லாவற்றிலும் சந்தேகம் இருக்கும்.

“வரும். நிச்சயம் வரும்,” என்றார் பேபி தீர்மானமாக.

ஹரிணி மெளனமாக இருந்தாள். அவளுக்கு அந்த பதிலில் அவ்வளவு திருப்தி இல்லை என்பது தெரிந்தது. (more…)