எஸ். சுரேஷ்

கிளிப்பேச்சு

 – எஸ். சுரேஷ் –

 

கண்கள் சூரியன் போல் சிவந்திருக்க
உடம்பெல்லாம் யாரோ அடித்ததுபோல் வலித்திருக்க
தேகம் நூற்றுநான்கு டிகிரி கொதித்திருக்க
கால்கள் தங்கள் வலுவை இழந்திருக்க
உடல் நடுக்கத்துடன் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு
‘அம்மா அம்மா’ என்று முனகிக் கொண்டிருதவனைப் பார்த்து

கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கிளி
“போத்திகினும் படுத்துக்கலாம்
படுத்துக்கினும் போத்திக்கலாம்”
என்று பாடியது.

ஒளிப்பட உதவி – Oriental Outpost

கவியின் கண் 17 – சாவின் நூற்பு நார்கள்

– எஸ். சுரேஷ் –

சிறிய சதுக்கம்

என் வாழ்க்கை ஒரு சிறு சதுக்கத்தின் வடிவம் பெற்றுவிட்டது
உன் மரணத்துக்கான ஏற்பாடுகள் கவனமாகச் செய்யப்படும் அந்த இலையுதிர்காலம்
நீ நேசித்ததால் நான் அந்தச் சதுக்கத்தைப் பற்றிக் கொண்டிருந்தேன்
சிறிய கடைகளின் அலங்காரமற்ற, பழைய நினைவுகளில் ஆழ்த்தும் மானுடம்
ரிப்பன்களையும் துணிகளையும் மடித்துப் பிரிக்கும் அதன் கடைக்காரர்கள்
நான் நீயாக நினைத்தேன், நீ சாகப் போகிறாய் என்பதால்
அங்கிருந்த என் வாழ்வெல்லாம் எனக்குரியதல்லாது போகும் என்பதால்
நீ சிரிப்பது போல் நான் சிரிக்க முயற்சித்தேன்
செய்தித்தாள் விற்பவனிடமும் சிகரெட் விற்பவனிடமும்
வயலெட்கள் விற்றுக் கொண்டிருக்கும் அந்தக் கால்களற்ற பெண்ணிடமும்
காலற்றவளிடம் உனக்காகப் பிரார்த்திக்கச் சொன்னேன்
அந்தச் சதுக்கத்தின் மூலையில் இருக்கும் சர்ச்சுகளின்
பீடங்கள் அனைத்திலும் மெழுகுவர்த்திகள் ஏற்றினேன்
என் கண்களைத் திறந்ததும் கண்டேன், வாசித்தேன்
உன் முகத்தில் நித்தியத்தின் சேவகம் எழுதப்பட்டிருப்பதை
தெருக்களை அழைத்தேன், இடங்களை, மனிதர்களை,
உன் முகத்தின் சாட்சிகளாக இருந்தவர்கள் அனைவரையும்
உன்னை அழைப்பார்கள் என்று, உன்னை அவிழ்ப்பார்கள் என்று
உன்னைச் சுற்றி சாவு நூற்றுக் கொண்டிருந்த நார்களையும் என்று

சோபியா டி மெல்லோ பிரெய்னர் அன்ட்ரீசன்
போர்ச்சுகீசிய மொழி கவிதையின் ஆங்கில மொழியாக்கம் , ரூத் ஃபெய்ன்லைட் (1994) (more…)

டஜன் வாழைப்பழம்

எஸ். சுரேஷ்

 

கூண்டிற்குள் நிலைகொள்ளாமல் அங்கும் இங்கும்
நடந்து கொண்டிருந்தது பிரும்மாண்டமான மனித குரங்கு
திடீரென்று நின்று கூண்டின் கம்பிகளை கையால் பிடித்து
தலையை கம்பிகள் நடுவில் விட்டு வெளியில் பார்த்தது
மறுபடியும் நடை, மறுபடியும் நின்று பார்ப்பது என்று இருந்தது

வாழைப்பழம் விற்பவன் வண்டியை தள்ளிக்கொண்டு வருவதைக்
கண்ட மனித குரங்கு இரு முறை கூண்டினுள் குதித்தது
பின்னர் கம்பிகளை வேகமாக ஆட்டி, தலையை நடுவில் நீட்டி
வாழைப்பழம் விற்பவனை பார்த்து கத்தியது
“ஒரு டசன் வாழப்பழம் அம்பது ரூபாக்கு வித்தா
நாங்கெல்லாம் எப்படிடா உயிர் வாழறது?”

திடுக்கிட்டவன் வண்டியை வேகமாக தள்ளிக்கொண்டுச் சென்றுவிட்டான்
இடைவிடாமல் கூண்டிற்குள் நடந்துக் கொண்டிருக்கிறது
மனித குரங்கு

பாம்புப் படலம்

– எஸ். சுரேஷ் –

“மாமி இங்க வாங்கோ. சீக்கிரம் வாங்கோ” என்று மீனா மாமியின் குரல் கேட்டது.

“என்ன ஆச்சோ. மாமி இப்படி கத்தறா” என்று கூறிக்கொண்டே அம்மா முன் பக்கம் சென்றாள். நானும் அம்மாவுடன் சென்றேன். நாங்கள் அப்போது சிகந்திராபாத் நியூ போயிகுடாவில் ஒரு பெரிய வீட்டின் பின்பக்கத்தில் குடியிருந்தோம் பத்மநாபா மாமாவும் முன் பக்கத்தில் இருந்தார்கள். அவர்கள் இந்த வீட்டிற்கு சொந்தக்காரர்கள்.

“என்ன ஆச்சு மாமி?” என்று அம்மா மீனா மாமியைக் கேட்டாள்.

“பாம்பு வந்திருக்கு மாமி”

“பாம்பா? எங்க?”

“அதுக்குள்ள இருக்கு,” என்று மீனா மாமி வாட்டர் மீட்டர் இருக்கும் குழி பக்கம் கை காட்டினாள். வாட்டர் மீட்டர் இரண்டடிக்கு இரண்டடி சதுர, பக்கவாட்டில் சிமெண்ட் பூசப்பட்ட குழிக்குள் இருக்கும். அந்தக் குழியின் மேல் சதுரமான தகர மூடி இருக்கும். அது சரியாக\ குழியின் மேல் உட்காராததால் குழிக்கும் மூடிக்கும் நடுவிலிருந்த இடைவெளி வழியாக பாம்பு உள்ளே சென்றுவிட்டது, (more…)

போயிகுடாவின் மாரடோனா

– எஸ். சுரேஷ் –

“மாரடோனா ஆடினத பாத்தீங்களா பாய்? ஒருத்தனா இருந்து ஜெர்மனிய தோக்கடிச்சிருக்கான் பாருங்க. என்ன ஆட்டம் நேத்தி. நம்ப எப்போதான் புட்பால் சூப்பர் பவர் ஆவோமோ. எப்போதான் நம்ப ஊர்ல ஒரு மாரடோனா பிறப்பானோ?” என்று ஆதங்கத்துடன் பஷீர் பாயைக் கேட்டேன். இரவு நாங்கள் எல்லோரும் அர்ஜென்டினா – ஜெர்மனி உலக கோப்பை இறுதி ஆட்டத்தை பார்த்தபின் மாரடோனாவின் மேல் எங்கள் எல்லோருக்கும் மரியாதை பெருகியிருந்தது.

“நம்ப ஊர்ல என்னடா? நம்ப காலனியிலேயே ஒரு பெலே, ஒரு மாரடோனா அளவுக்கு ஆடற ஒரு ஆள் இருந்தான்னு உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார் பஷீர் பாய்.

“நம்ப போயிகுடாலையா?” என்று ஆச்சரியமாகக் கேட்டான் புஜ்ஜி

“ஆமாம். போயிகுடாலதான். உங்களுக்கு எல்லாம் தெரிஞ்ச ஆளுதான்” என்றார் பஷீர் பாய் (more…)