மித்யா

சம்பவம் நடந்ததா?- உண்மையைத் தேடும் புதுமை நாவல்

மித்யா

சமீபத்தில் வெளியான மாயக்கொண்டானின் ‘சம்பவம் நடந்ததா?’ என்ற நாவல் தமிழ் இலக்கியச்சூழலில் ஒரு புது முயற்சி என்று சொல்லவேண்டும். சிலர் செவ்வியல் ஆக்கங்களை உக்கிரமாக உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்த நாட்களில் இப்படி ஒரு நாவல் வருவது நமக்கு ஆச்சரியம் தருகிறது.

நாவலில் இருப்பதோ ஒரே ஒரு சம்பவம்தான். அதுவும் முற்றுப்பெறாத ஒரு சம்பவம். இதை வைத்துக்கொண்டு பல கேள்விகளை எழுப்புகிறார் எழுத்தாளர் மாயக்கொண்டான். மனிதன் என்பவன் யார்? உண்மை என்பது என்ன? நாம் கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் உண்மையா? தீர விசாரித்து அறிவது மட்டும் என்ன பெரிய உண்மையா? இப்படி பல கேள்விகளைக் கேட்க வைக்கிறார் ஆசிரியர். (more…)