
ஜெஜூரியின் கற்கள்
திராட்சையைப்போல இனியவை
என்ற சைதன்யா
ஒரு கல்லை
தன் வாயிலிட்டு
கடவுள்களாக
உமிழ்ந்தான்

ஜெஜூரியின் கற்கள்
திராட்சையைப்போல இனியவை
என்ற சைதன்யா
ஒரு கல்லை
தன் வாயிலிட்டு
கடவுள்களாக
உமிழ்ந்தான்
கதவு திறந்திருக்க
மனோகர் நினைத்தான்
இன்னொரு கோயிலென
உள்ளே பார்த்தான்
எந்தச்சாமி இருக்குமோ
என்ற எதிர்பார்ப்பில்
அகன்ற கண்கள்
கொண்ட கன்று ஒன்று
திரும்பிப் பார்க்கவும்
இஃதொன்றும்
கோயில் அல்ல
மாட்டுத்தொழுவம் மட்டுமே
என்றான் மனோகர்
௦௦௦
அருண் கொலாட்கரின் Manohar என்ற கவிதை தமிழாக்கம்
காஸ்மிக் தூசி
வரைபடம் (அல்லது) சதுரங்க கட்டம்
சதுரங்க கட்டங்கள் –
எவரோ கிழவர்கள்
வரைந்திருக்க வேண்டும்
நேற்று
சுண்ணக்கட்டியால்
இருபதடி நீளமுள்ள
ஆமையின் முதுகில்
தேய்ந்து அழிந்து
மங்கலாகிக்கொண்டிருக்கும்
ஓடி விளையாடும்
குழந்தைகளின்
வெறுங்கால்களின்
கீழே
…
அருண் கொலாட்கரின் The Pattern என்ற கவிதை தமிழாக்கம்
– காஸ்மிக் தூசி –
கடவுள்களை
இருளில் வைத்திருக்கிறது
தாழ்வான இந்தக்கோவில்
பூசாரியிடம்
தீப்பெட்டி இரவல்தர
ஒவ்வொருவராக
வெளிச்சத்துக்கு வருகிறார்கள்
கடவுள்கள்
ஸ்வாரஸ்யத்துடன் பார்க்கும் பஞ்சலோகம்
புன்னகைக்கும் கருங்கல்
ஆச்சரியம் ஏதுமற்ற
இன்னொரு கடவுள்
தீக்குச்சி எரியும்
இடைவெளியில்
சைகைகள்
உயிர்த்தெழுந்து மறையும்
ஒவ்வொன்றாக
தோன்றி மறையும்
அபிநயம்
மீண்டும் மறையும்
அந்த சாமி யார்
எனக் கேட்டால்
எட்டுக்கை அம்மன்
என்கிறான் பூசாரி
சந்தேகமாக இருமுகிறது
ஒருதீக்குச்சி
எண்ணிப்பார்த்தால்
கைகள் பதினெட்டு
எதிர்த்துக்கேள்வி கேட்டால்
இருக்கலாம் ஆனால்
இது எட்டுக்கை அம்மன்தான்
என்கிறான் பூசாரி
வெளியே
வெய்யிலுக்கு வந்து
சார்மினார் சிகரெட்டை
பற்ற வைத்தால்
இருபதடி
ஆமையின்மீது
ஏறி விளையாடிகொண்டிருக்கிறார்கள்
குழந்தைகள்.
***
(அருண் கொலாட்கர் எழுதிய A Low Temple என்ற கவிதையின் தமிழாக்கம்)
– காஸ்மிக் தூசி –
போதும் நிறுத்து
என்றான் ஒரு கல்லிடம்
சைதன்யா, கல்லின் மொழியில்
ஒரு சாதாரண
பாறையாக இருப்பதில்
என்னதான் பிரச்சினை
உனக்கு
சற்றும் பொருந்தவில்லை
இந்த நிறம்
முகத்திலிருக்கும்
சிவப்பு சாயத்தை
துடைத்தெறி முதலில்
எப்படியானும்
செவ்வந்திப்பூக்களை சூட்டுவேன்
உனக்கு. அவற்றை
உனக்கு பிடிக்குமல்லவா
எனக்கும்தான்.
***
(அருண் கொலாட்கர் எழுதிய Chaitanya என்ற கவிதையின் தமிழாக்கம்)