எழுத்து

மிக முக்கியமான கேள்வி – ஜேன் ஸ்மைலி

டெகாமரான் கதைகளில் மூன்றாம் நாளன்று ஃபியாமெட்டா ஒரு கதை சொல்கிறாள். ஹிதோபதேசத்தின் லத்தீன் மொழிபெயர்ப்பிலிருந்து பொகாஷியோ கையாண்ட கதை அது. இதில் தான் விரும்பும் மணமான ஒரு பெண்ணை பொது குளியலறையில் சந்திக்க திருட்டுத்தனமாகத் திட்டமிடுகிறான் ஒருவன். அங்கே, இருட்டில் அவளது கணவனாக நடித்து அவளைக் கற்பழிக்கிறான். தான் ஏமாந்துவிட்டதை அறிந்தபின் அந்தப் பெண்ணுக்கு தான் நேசிக்கும் தன் கணவனை ஏமாற்றுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போகிறது – இதிலுள்ள வெட்கமும் சீரழிவும் அவளுக்கே உரியது, அவளைக் கற்பழித்தவனுக்கல்ல. இன்றும் கார்டியனோ அல்லது வேறு பல செய்தித்தாள்களைப் படித்தாலும் 650 ஆண்டுகளுக்குப்பின், ஹிதோபதேசம் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், 900 ஆண்டுகளுக்குப்பின், நம்மால் இந்தக் கதையைக் காண முடிகிறது. ஏமாற்றப்பட்ட பெண், கடெல்லா, கற்பழித்தவன் அறிந்த உண்மையை உணர்ந்திருக்கிறாள்: இன்று நாம் வாசிக்கும் இளம் பெண்களைப் போலவே, ஏமாற்றப்பட்ட குற்றத்துக்காக அவள் தண்டிக்கப்படுவாள் அல்லது கொல்லப்படுவாள். அவளது நோக்கங்கள் ஒரு பொருட்டல்ல. ஆனாலும் என்ன? Plus ça change, plus c’est la même chose, என்று நாம் சொல்லலாம். ஆனால், அந்த மிக முக்கியமான கேள்வியின் காரணத்தால், நாம் அதைச் செய்வதில்லை. (more…)

கதிரியக்கம்

மழை கொட்டிக் கொண்டிருந்தது. குடைகளின்கீழ் நடந்து சென்றவர்கள் இயல்பாய்ப் பெய்த மழையைச் சபித்தனர் – மழைக்காலம் அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது.

ஆனால் ஒற்றைக் குடையின் கீழ் இணைந்து நடந்த அந்தச் சிறுவனும் சிறுமியும் மழையை ரசித்து அனுபவித்தனர். மழை, அவர்களுக்கென்று வாய்த்த வரமாயிருந்தது.

தோளோடு தோள் சேர்ந்து நடந்தனர். முறுவலித்து முகம் மலர்ந்திருந்தது. அவர்கள் மழையோடிருந்தனர்.

தனியாய்ச் சென்றவர்கள் இருவரையும் பார்த்துப் பொறாமைப்பட்டனர். பெரியவர்களால் சிரியவர்களின் மகிழ்ச்சியைச் சகித்துக் கொள்ள முடியாது – அந்தப் பெண்ணும் பையனும் ஒருவர் மீதொருவர் கொண்டிருந்த அன்பை அனைவரும் அறிய வெளிப்படுத்திச் சென்றனர்.

யாரும் இது குறித்த தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவில்லை. சீக்கிரம் வீடு போய்ச் சேர்ந்தாக வேண்டும்.

(more…)

ஆயிரம் ஏக்கராக்கள்

– அஜய் ஆர். – 

ஒரு முதியவர் தன் சொத்துக்களை தன் மூன்று பெண்களுக்கிடையே பிரித்துத் தர முடிவு செய்ய, மூத்த இரு பெண்கள் அதை ஏற்றுக்கொள்ள, கடைசி மகள் அவ்வாறு செய்வதில்லை. அந்தப் பெண்ணை அவர் விலக்கி வைக்கிறார். ஷேக்ஸ்பியரை முழுமையான/ சுருக்க (abridged/original) பதிப்பில் படித்திருந்தவர்கள் இந்தச் சூழலை ‘King Lear’ கதையோடு இணைக்கலாம். ஆம், தன் நாட்டை இரு நன்றிகெட்ட பெண்களுக்கு கொடுத்து துன்பப்பட்ட லியரின் கதையை , ஸ்மைலி லியரின் இரு மூத்த பெண்களின் கோணத்தில் ‘A Thousand Acres’ நாவலில் எழுதியுள்ளார்.

லியராக இதில் லாரி குக். அவர் அரசரல்ல, அதற்கு மாறாக ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு உரியவர். அவருக்கு மூன்று பெண்கள். மூத்தவள் ஜின்னியும் அடுத்த பெண் ரோசும் திருமணமாகி தங்கள் கணவர்களுடன் அப்பாவுக்கு ஒத்தாசையாக பண்ணையில் வசிக்கிறார்கள்,. கடைசி பெண் கரோலின் ஒரு வக்கீல். அப்பாவைவிட்டுப் பிரிந்து வேறொரு ஊரில் இருக்கிறாள். குடும்பத்தினர் அனைவரும் கூடியிருக்கும் ஒரு நாளில் தன் நிலபுலன்களைப் பெண்களுக்குப் பங்கு பிரிப்பதாக லாரி தன்னிச்சையாக முடிவெடுக்கிறார். ஜின்னியும் ரோசும் இதற்குச் சம்மதிக்கின்றனர். ஆனால் கரோலின் அதற்கு எதிராகக் குரலெழுப்புகிறாள். இதனால் லாரி தன் சொத்தில் கரோலினுக்கு உரிமையில்லை என்று அறிவிக்கிறார். இதையடுத்து தொடரும் நிகழ்வுகள் அனைவரின் வாழ்வையும் துயர் தோய்ந்ததாக மாற்றுகின்றன. நெருங்கிய உறவுகள் கடும் அழுத்தத்துக்கு உட்படுத்தப்பட்டு , குடும்பத்தினர் அனைவருமே வீழ்ச்சியை நோக்கி தள்ளப்படுகின்றனர். (more…)

க்ருஹஸ்தன்

அதிகாரநந்தி

”என்னடி இன்னிக்கு உங்கப்பா வராறா?”

“இல்லையே.. ஏன்?”

“இல்ல விடியற போதே எழுந்து உக்காண்டிருக்கையே… கீழ போய்ப் பால் கூட வாங்கியிருக்க போல; இன்னிக்கு அந்தக் கடக்காரன் கேவலமா இளிக்கலையா?”

“இளிச்சான். ஆனா அவ்ளோ கேவலமா இல்லை”

“போகப் போக பழகிடும்”

“ஆம்பிளைங்க எல்லாம் இப்படி வழியாட்டா தான் என்ன?”

“உங்கப்பா கிட்ட போய்க் கேளு” (more…)

கவியின்கண் – 11: “சிறிய ஒரு நட்சத்திரத்தின் கீழ்”

சிறிய ஒரு நட்சத்திரத்தின் கீழ்

தேவை என்றழைத்ததற்காக, தன்னிகழ்விடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
அப்படி அழைத்தது தவறென்றால், தேவையிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
மகிழ்ச்சியே, தயவு செய்து  நான் உன்னை உரிமை கொண்டாடுவதற்கு கோபித்துக் கொள்ளாதே.
மரித்த என்னவர்களே, என் நினைவுகள் மெல்ல மறைவதைப் பொறுத்துக் கொள்ளுங்கள். (more…)