எழுத்து

அஞ்சலி : குஷ்வந்த் சிங் – வண்ணமயமான வாழ்க்கை

– வெ. சுரேஷ் – 

சென்ற மாதம் மறைந்த மிக மூத்த எழுத்தாளர் (99 வயது!) குஷ்வந்த் சிங் தமிழ் இலக்கிய உலகத்தாரால் அவ்வளவாக கண்டுகொள்ளப்படவில்லை, மறைவின்போதும். அச்சில் வரும் இலக்கியச் சிறுபத்திரிக்கைகளைப் பற்றி அதற்குள் சொல்ல முடியாது, ஆனால் தமிழ் இலக்கியம் சார்ந்த வலைதளங்களைப் பார்க்கும்போது அப்படிதான் தோன்றுகிறது (சொல்வனம் இணைய இதழில் வெங்கட் சாமிநாதன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மற்றபடி அவரைப் பற்றி ஆனந்த விகடனில் தான் எழுதிய கட்டுரை வெளிவரவிருப்பதாக சாரு நிவேதிதா தன் வலைப் பக்கத்தில் அறிவித்துள்ளார்).

நம் வாரந்தர வணிகப் பத்திரிக்கைகள் வழக்கம் போல் அவரைப் பற்றி பொதுபுத்திக்கு எப்போதுமே தெரிய வந்திருந்த செய்திகளையும் அவரது ஏ ஜோக்ஸ் மற்றும் கிளுகிளுப்பான பக்கங்களை வெளியிட்டும் நினைவு கூர்ந்தன. The Ilustrated Weekly ஆசிரியராக அவர் செயல்பட்டு அப்பத்திரிக்கையைப் பிரபலமாக்கியதும் நினைவுகூரப்பட்டது. Train to Pakistan என்ற நாவலின் பெயர் உதிர்க்கப்பட்டதும் வாஸ்தவம்தான். ஆனால், தமிழின் தீவிர இலக்கிய உலகம் அவரை முற்றிலுமாகப் புறக்கணித்தேவிட்டது என்று தோன்றுகிறது. (more…)

காலத்தின் முன்னே

 

Stained Glass, Berne, Switzerland,

 

மனிதரின் அன்புக்கு பாத்திரமாக
இருக்க ஆசைப்படாதீர்கள்

அவர்கள் எத்தனை மோசமான
வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
என்று குத்திக்காட்டுங்கள்

அவர்களுடைய உழைப்பைத்
திருடிக் கொள்ளுங்கள்
முடியுமானால்
அவர்தம் கரங்களை முறித்துவிடுங்கள்

வருடங்கள் கடந்து சந்திக்கும் போது
உங்கள் அல்ப அதிர்ஷ்டங்களையும்
அவர்களின் புதைக்கப்பட்ட ஆசைகளையும்
நினைவுபடுத்துங்கள்

காலம் வழக்கம் போல்
நம்மிடம் வேறுபாடு காட்டாது
போகட்டும்

நம் நண்பர்கள் தங்கள் பெயர்த்திகளுக்குச்
சொல்லும் கதைகளில் ராக்‌ஷதர்களாய்
எஞ்ஞான்றும் வாழ்வோம்!

–  அதிகாரநந்தி

Image credit : Mememto Mori, Catholic Eye Candy

 

கவிதையைத் திருத்தி எழுதுதல் – எலியட்டும் பவுண்டும் – ஹ்யூ கென்னர்

(எலியட், பவுண்ட் மற்றும் பாழ்நிலம் கவிதையின் முக்கியத்துவம் குறித்து எம். டி. முத்துக்குமாரசாமி மிகச் சிறப்பான ஆவணப் பதிவொன்றைச் செய்திருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு சிறந்த கவிதையும்கூட பிறருடன் கலந்தாலோசித்து, முழுமையாகத் திருத்தி எழுதப்பட்ட ஒன்றுதான் என்பதை உணர்த்தும் நோக்கத்தில் ஹ்யூ கென்னர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி தமிழாக்கம் செய்யப்படுகிறது.)

எலியட்டை விட வயதில் மூத்த பவுண்ட் எலியட்டை விட எராளமாக எழுதிக் குவித்த பவுண்ட், எலியட்டையே கவி என்று கொண்டாடினார். நவீன காப்பியமான யுலிசஸ் எழுதிய ஜாய்ஸ், தத்துவ அறிஞரும் கடவுள் மறுப்பாளருமான ரஸ்ஸல், எலியட்டையே கவி என்றறிந்திருந்தனர். எதனால்? எலியட்டின் கவிதையிலே வாசகனின் அகத்தோடு ஆத்மார்த்தமாய் பேசக்கூடிய குரல் இருந்தது. முதலாம் உலகப்போருக்குப் பின் எழுதுகிற எலியட்டின் கவிதையில் பேசுகிற குரல் ஐரோப்பிய சமூக ஆன்மாவின் குரல். பாழ் நிலத்தில் அந்தக்குரல் தெள்ளத்தெளிவாய் Four quartets ஐ விட அணுக்கமாக வாசகனிடத்தே பேசுகிறது. அந்தக் குரல் உடைந்து போயிருக்கிறது; அவநம்பிக்கையுடனிருக்கிறது. கடவுள் கைவிட்டுவிட்ட குரல் அது. அல்லது கடவுளை கை விட்டு விட்டதால் பாதுகாப்பற்று அமைதியின்மையில் அலைவுறும் குரல். எதையாவது பற்றிக்கொள்ள முடியாதா என்று பரிதவித்து இலக்கிய பிரதிகளெங்கும் அலைந்து உகந்த வரிகளைத் தேடி அவைகளை கோர்த்து கோர்த்து சில சமயம் உரையாடலாய் சில சமயம் பிதற்றலாய் சில சமயம் தெருச்சொல்லாய் பிருகதாரண்ய உபநிடத்திலிருந்து சில வரிகளையும் சேர்த்துக்கொண்டு ஹிரானிமோ மீண்டும் பைத்தியமாகிவிட்டான் ஓம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஒரு collage ஆக அமைகிறது. போருக்குப் பிந்ததைய சமூகத்தின் தீவிர நெருக்கடி ஒவ்வொரு பிரஜையின் மனத்திலிருக்க அந்த மனத்தின் குரலாகவே எலியட்டின் கவித்துவ குரல் பாழ் நிலத்தில் அந்தரங்க சுத்தியுடன் பேசுகிறது. எலியட்டின் ஆத்மார்த்தமாகப் பேசும் கவித்துவ குரலை பவுண்டின் மேதமையே உடனடியாக அடையாளம் காணுகிறது.

“ஆத்மார்த்தமாக பேசும் கவிக்குரல்கள்: பாரதியும் டி.எஸ்.எலியட்டும்”, எம். டி. முத்துக்குமாரசாமி

(more…)

தவறாத குறி

 – எஸ். சுரேஷ் –

 

 

உயரே ஆகாயத்திலிருந்து பருந்து
தண்ணீரில் இருக்கும் அந்த மீனை பார்த்தது
தன் குருநாதர் சொல்லிக்கொடுத்தபடி மீனின்
கண்ணை பார்த்தது

விரிந்திருந்த தன் சிறகை மூடிக்கொண்டு
உடம்பு ஒரு வில் போல் காற்றை கிழிக்க
மீனை நோக்கி இறங்கியது

அதன் குறி அந்த மீன், அதன் கண்ணை,
அதை மட்டும் பார்த்துக்கொண்டு
குறி தவறாமல் இறங்கியது

மீனின் கண்
மீனின் கண்
மீனின் கண்
மீனின் கண்

அதற்கு தண்ணீரில் ஆடும் தாமரை
கண்ணில் படவில்லை
கரையோரம் இருக்கும் மாமரமும்
கண்ணில் படவில்லை
அதே மீனைப் பார்த்து மரக்கிளையிலிருந்து
புறப்பட்ட மீன்கொத்தி பறவையும்
கண்ணில் படவில்லை

 

புகைப்பட உதவி : விக்கிபீடியா

இனியது வாழ்வு

This slideshow requires JavaScript.

புகைப்படத் தேர்வு: விக்டர் லிங்கன்

Audio credit : Dolores Keane and John Faulkner, Mouth Music, Percussion – Fran Bree, Ubuweb