சிறுகதை

மானுடம் குடியமர்ந்த கோள் : முதல்நிலை தகவலறிக்கைகள் – 2

– சிகந்தர்வாசி – 

நாங்கள் இந்தக் கோளில் குடியமர்த்தப்பட்ட சில காலத்துக்குப்பின் தொழில்நுட்பத்தைச் செலுத்தும் தீசலெண்ணெய் முதலான உள்ளீட்டுப் பொருட்கள் இல்லாது போயின. இந்த இழப்பைத் தொடர்ந்து எங்கள் சமுதாயம் அதுவரை கற்றிருந்த கல்வியின் பயனை இழந்தது.

விவசாயிகளும் வனவாசிகளுமே இத்தகைய மாற்றங்களால் தடுமாற்றமடையாதவர்களாக இருந்தனர். விவசாயிகள் தம்மிடமிருந்த விதைகளைக் கொண்டு தொடர்ந்து பயிர்ச் சாகுபடி செய்தனர். வனவாசிகள் இயற்கையை ஒட்டி வாழ வேண்டிய சூழலில் மிகக் கடுமையான சவால்களை எதிர்கொள்ள எங்கள் அனைவருக்கும் பயிற்சியளித்தனர். மண்வளம் குன்றாதிருந்தது, பயிர்கள் செழித்தன. நாங்கள் கொணர்ந்திருந்த விலங்குகள் வனத்தில் பெருகின. வனவாசிகள் வேட்டையாடக் கற்றுத் தந்தனர். எங்கள் காலனி மெல்ல மெல்ல உணவுப் பற்றாகுறையிலிருந்து மீண்டது. “உணவைப் பொருத்தவரை நாம் தன்னிறைவை எட்டிவிட்டோம்,” என்று ஒரு மேலாண்மை நிபுணர், சுள்ளி பொறுக்கும்போது குறிப்பிட்டதில் உண்மை இல்லாமலில்லை. (more…)

குருதிச் சோறு 3

நரோபா

அன்று சிரமட்டார் காளியம்மன் திருவிழாவின் கடைசி நாள், பிராமண மண்டகப்படி. வைத்தியர் வீடு திமிலோகப்பட்டது. வைத்தியர் குடும்பத்து பங்காளிகள் எந்த மூலையில் இருந்தாலும் ஆடிக் கிருத்திகை அன்று ஊருக்கு வந்துவிட வேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஏனெனில் அன்று அவர்கள் குடும்ப தெய்வமான அன்னசௌரக்ஷாம்பிகைக்கு நோன்பு நோற்பது வழக்கம். அதன் பின்னர் அனைவரும் கலந்துகொள்ளும் சமபந்திபோஜனம் நடைபெறும். அதிசயமாக இந்த முறை இரண்டு திருநாள்களும் ஒரே நேரத்தில் வந்துவிட்டன.

இழவு விழுந்து பண்டிகைகள் இல்லாத ஆண்டுகளிலும்கூட இந்த பூஜையும் சமபந்தி போஜனமும் நிச்சயம் உண்டு. சபரியின் தாத்தாவிற்கு விபரம் தெரிந்ததிலிருந்து வருடம் தவறாமல் இது நடந்துவருகிறது. முதலில் லலிதா சஹஸ்ரநாமம் கூட்டாக பாராயணம் செய்வார்கள். பாலிலும் தேனிலும் தயிரிலும் பஞ்சாமிருததிலும் அபிஷேகம் செய்துவிட்டு மஞ்சள் குங்குமத்தில் அலங்காரம் செய்து பட்டுநூல் சார்த்தி, சிவப்பு அவல் பாயசம் நைவேத்தியம் செய்துவிட்டு தீபாராதனை காட்டுவார்கள். நோன்புக் கதையை வீட்டின் மூத்த சுமங்கலி சொல்லக் கேட்டுவிட்டு வீட்டுப் பெண்களெல்லாம் கையில் தோரம் கட்டிக்கொள்வது வழக்கம். (more…)

மானுடம் குடியமர்ந்த கோள் : முதல்நிலை தகவலறிக்கைகள் – 1

– சிகந்தர்வாசி – 

நான் அணிந்திருக்கும் முகக்கவசத்தைப் பார்க்க சிரிப்பு வருகிறது, இல்லையா? பூட்டப்பட்டிருந்த பெட்டிகளில் ஒன்றில் இந்தக் கருவி இருந்ததை இன்றுதான் கண்டுபிடித்தோம். இதை அணிந்துகொண்டால் நம் கவனம் அதிகரிக்குமாம். ஆக்சிஜன் என்ற சமாச்சாரத்தை ஒரு குழாய் வழியாக மூக்கில் செலுத்துகிறார்கள். இதன் விளைவாக இதை அணிந்திருப்பவனது காது அடைத்துக் கொள்கிறது. இவ்வாறாக உலகிலிருந்து துண்டிக்கபட்ட நிலையில் இந்த முகக்கவசத்தில் இருக்கும் இரு சிறு கீறல்களின் வழியாக நாம் வாசித்துக் கொண்டிருக்கும் விஷயத்தில் முழு கவனம் செலுத்த முடிகிறது.

இப்போது இதற்கென்ன அவசியம் வந்தது என்று நீங்கள் கேட்கக்கூடும், என் கவனத்தைக் குவித்து நான் அப்படி என்ன ஆராய்ச்சி செய்கிறேன்? ஏன் எனக்கு ஒரு பதற்றமாக இருக்கிறது? ஏன் என் மனம் நிலைகொள்ளாமல் தவிக்கிறது? என் பதற்றத்துக்குக் காரணம் என்ன? இந்த முகக்கவசம் என் பதற்றத்தைக் குறைக்குமா? இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றால் நான் எங்கள் வரலாற்றைக் கொஞ்சம் அறிமுகம் செய்ய வேண்டும். (more…)

அவனுள் இருக்கின்றன ஆன்மாக்கள்…

– சிகந்தர்வாசி – 

ரேவன் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தான். பாதாதிகேசம் பளபளத்தான் அவன் – கருநிற ஷூக்கள் அணியும் வழக்கம் எப்போதும் இருந்தது. தன் மேலங்கியை அடிக்கடி பாலிஷ் செய்து கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்ததால் அதுவும் வெயில் ஒளியில் மினுங்கியது. ரேவனை இப்போது காண நேரிடும் எவரும் அவனை ஒரு நீதிபதியென்றோ பாதிரியாரென்றோதான் நினைத்துக் கொள்வார்கள். ஆனால் அவனோ சட்டம் படிக்கும் வாய்ப்பும் சர்ச்சில் சேரும் வாய்ப்பும் கிடைத்திருந்தபோதும் அவ்விரு பாதைகளையும் நிராகரித்திருந்தான். (more…)

குருதிச் சோறு – 2

– நரோபா –

பகுதி – 1
பகுதி – 2

பாலாயி என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். தன்னைக் கைவிட்டுச் சென்ற காத்தமுத்துவை ஆசைதீர வைய வேண்டும் என்பதுதான் உடனடியாக அவளுக்கு தோன்றித் தொலைத்தது. ஆறேழு மாதங்கள் இருக்கலாம். வெள்ளாமை பொய்த்து காடு கழனி போகாமல் அவதிப்பட்ட காலம் அது. பிள்ளைகளுக்கு எப்படியோ ஒருவேளை கேப்பை கஞ்சி காய்ச்சிக் கொடுத்து கொண்டிருந்தாள். கையில் இருந்தது எல்லாம் கரைந்து கொண்டிருந்தது. பிள்ளைகளும் பிள்ளைத்தாய்ச்சியுமான தானும் சீரழிந்து கொண்டிருப்பது தெரியாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் அவனை நினைத்து ஆத்திரப்பட்டாள். வழக்கம் போல் அன்றைய சண்டையும் அவள் அடி வாங்கி அழுவதில் முடிந்தது. அந்த இரவு ஆத்திரத்துடன் கள்ளுக்கடைக்குப் போனவன் திரும்பியே வரவில்லை. என்ன ஆனான் என்று ஒரு சேதியும் இல்லை. ஓரிரு மாதங்கள் ஊருக்குள் இருந்துவிட்டு, பிறகு புதுக்கோட்டை ராஸ்தாவை ஒட்டியிருந்த கண்மாயில் கொஞ்சம் தோண்டினால் ஊற்றுநீர் வரும் என்பதாலும், ஊருக்குள் மாரியாத்தா சூறையாடில் கொண்டிருக்கிறாள் என்பதாலும் குடும்பம் குடும்பமாக கம்மாய் அருகில் குடில் போட்டுக்கொண்டு தங்கினார்கள். (more…)