
நாங்கள் இந்தக் கோளில் குடியமர்த்தப்பட்ட சில காலத்துக்குப்பின் தொழில்நுட்பத்தைச் செலுத்தும் தீசலெண்ணெய் முதலான உள்ளீட்டுப் பொருட்கள் இல்லாது போயின. இந்த இழப்பைத் தொடர்ந்து எங்கள் சமுதாயம் அதுவரை கற்றிருந்த கல்வியின் பயனை இழந்தது.
விவசாயிகளும் வனவாசிகளுமே இத்தகைய மாற்றங்களால் தடுமாற்றமடையாதவர்களாக இருந்தனர். விவசாயிகள் தம்மிடமிருந்த விதைகளைக் கொண்டு தொடர்ந்து பயிர்ச் சாகுபடி செய்தனர். வனவாசிகள் இயற்கையை ஒட்டி வாழ வேண்டிய சூழலில் மிகக் கடுமையான சவால்களை எதிர்கொள்ள எங்கள் அனைவருக்கும் பயிற்சியளித்தனர். மண்வளம் குன்றாதிருந்தது, பயிர்கள் செழித்தன. நாங்கள் கொணர்ந்திருந்த விலங்குகள் வனத்தில் பெருகின. வனவாசிகள் வேட்டையாடக் கற்றுத் தந்தனர். எங்கள் காலனி மெல்ல மெல்ல உணவுப் பற்றாகுறையிலிருந்து மீண்டது. “உணவைப் பொருத்தவரை நாம் தன்னிறைவை எட்டிவிட்டோம்,” என்று ஒரு மேலாண்மை நிபுணர், சுள்ளி பொறுக்கும்போது குறிப்பிட்டதில் உண்மை இல்லாமலில்லை. (more…)
