சிறுகதை

ஒரு கை

வெ கணேஷ்

“நான் எண்ணற்ற பௌத்தர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் தான தர்மங்கள் செய்கிறேன்; பல புத்த கோயில்களுக்கு நிவந்தங்கள் அளிக்கிறேன். இத்தகைய செயல்கள் எனக்கு என்ன மாதிரியான நல்-விளைவுகளைத் தரும்?” என்று அரசன் கேட்டபோது தயக்கமோ, முதன்முதலாக தென்- சீனாவின் பேரரசனைச் சந்திக்கிறோம் என்ற வியப்புணர்வோ இல்லாமல் அந்த அயல்நாட்டு பௌத்தர் மறுப்பது போல் தலையசைத்து, “ஒரு விளைவும் தராது” என்றார்.

அரசன் நெற்றி சுருக்கினான்; பிறகு சுதாரித்துக் கொண்டு வினவினான். “புத்தர் இருக்கிறாரா? அவரைக் காணுதல் சாத்தியமா?”

இம்முறை போதி தர்மர் பதிலளிக்கச் சில வினாடிகள் எடுத்துக் கொண்டார், “இல்லை”.

போதி தர்மரின் பதில்கள் அரசனுக்குச் சினமளித்தன. “என் முன் நில்லாதீர். இங்கிருந்து எங்காவது சென்று விடுங்கள்,” என்று அவன் ஆணையிட்டதும் போதி தர்மர் புன்னகைத்தார். அவர் உதடுகள் திறந்த மாதிரி தெரியவில்லை என்றாலும் உள்ளுக்குள் ஒரு பதற்றமுமில்லாமல் அவர் சிரித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவரின் விழிகள் சபையோருக்கு உணர்த்தின. (more…)

வித்தைக்காரனின் வெஞ்சினம்

Stephen Leacock
தமிழாக்கம்- ஸ்ரீதர் நாராயணன்

Stephen Leacock இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கில இலக்கிய உலகில் மிகப் பிரபலமாக அறியப்பட்ட நகைச்சுவையாளர். பரிகாசம் விரவிய விமர்சனங்களில் பொதுபுத்தி மடமையை சாடுவது அவரின் சிறப்பு. ஸ்டீஃபன் லீகாக் நினைவாக ‘நகைச்சுவையாளர் பதக்கம்‘ தொடர்ந்து 65 வருடங்களாக வழங்கப்படுகிறது. The Conjurer’s revenge நூற்றாண்டு பழமையான புனைவாக இருந்தாலும் இன்றைய காலத்திற்கும் பொருந்தி வரும் கதையாக அமைந்திருக்கிறது.

conjurer-revenge

ப்பொழுது சீமாட்டிகளே, கனவான்களே” சொன்னான் வித்தைக்காரன் “இந்த துணியில் எதுவுமில்லை என்று உங்களிடம் காட்டியபடிக்கு, இதிலிருந்து தங்கமீன்கள் கொண்ட ஒரு நீர்க்கிண்ணத்தை எடுக்கப்போகிறேன். ப்ரெஸ்டோ!”

அந்தக் கூடம் முழுவது மக்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள், ‘ஆ! என்ன அற்புதம்! எப்படி இதை செய்கிறான்?’

ஆனால், முன் இருக்கையில் இருந்த துரித பேர்வழி, தன் அருகே இருப்பவர்களிடம் சத்தமாக கிசுகிசுத்தான் “அவன்-கைக்குள்-ஒளித்து-வைத்திருந்தான்” (more…)

உண்மைகள், ஆனால் வெட்கங்கெட்ட பொய்கள்

பீட்டர் பொங்கல் –

Kurt Vonnegut எழுதிய Cat’s Cradle, 1960களின் அமெரிக்க எதிர்கலாசாரத்தைக் கட்டமைத்த மிக முக்கியமான பிரதிகளுள் ஒன்று. இதில் வரும் பொகொனிய சமயம், பெறும் வாதையிலும் நம்பிக்கையின் ஒளிக்கீற்றைப் பொய்களால் பெற்று, மனிதன் தன் வாழ்வுக்கு ஒரு பொருள் கொள்ள இயலும் என்று எண்ண வைக்கும் வோனகட்டிய தரிசனம்.

பொகொனிய முதல் நூலும், அதன் அந்திமக் கிரியையான சேற்றுப்பாடலும் பதாகை வாசகர்களுக்காக இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.

முதல் நூல்

நான் சொல்லப்போகும் உண்மைகள் அனைத்தும் வெட்கங்கெட்ட பொய்கள்.

முதலில் கடவுள் மண்ணைப் படைத்தார். பிறகு, அதைத் தன் அண்டத்தனிமையில் கண்டார்.

“சேற்றைக் கொண்டு உயிரினங்ளை உருவாக்குவோம், இந்தச் சேறு நாம் என்ன செய்திருக்கிறோம் என்று பார்க்கட்டும்” என்றார் கடவுள். அசைவன அனைத்தையும் படைத்தார், அவற்றிலொன்று மனிதன். மனிதனான  சேறு மட்டுமே பேச முடிந்த உயிரினம். (more…)

அஞ்சலி

-அதிகாரநந்தி-

Obituary_Athigaranandhi

“வணக்கம் சார்”

”சொல்லுய்யா. என்ன விஷயம்? என்னையெல்லாம் ஞாபகம் வெச்சுருக்க போலிருக்கே”

“என்ன சார் இப்படிச் சொல்றீங்க. போன வாட்டி நீங்க அனுப்பினத பதிப்பிக்க முடியாம போச்சு”

“ம்ம்”

“சார் விஷயம் தெரியுமா? நம்ம ராமசாமிய  ஆஸ்பத்ரில அட்மிட் பண்ணியிருக்காங்களாம்”

“என்னவாம்”

“ஹார்ட் அட்டாக் தான் சார். கொஞ்சம் சீரியஸ்னு சொல்லிக்கறாங்க”

“ம்ம்”

“நீங்க அவரப்பத்தி ஒரு கட்டுரை எழுதிக் கொடுத்தீங்கன்னா…. இந்த வாரமே போட்டுறலாம்”

“ம்ம்”

“இன்னிக்கு சாயங்காலத்துக்குள்ள…”

”மெயில் பண்றேன்யா…”

இரண்டு மணிநேரம் கழித்து.

”சார்…”

“முடிச்சாச்சு இதோ மெயில் பண்றேன். எதையும் எடிட் பண்ணிடாத”

“சார், அதில்லை. அவர் வெறும் செக்கப்புக்கு தான் போனாராம். இப்போ திரும்ப வீட்டுக்கு போயிட்டார்னு சொல்றாங்க.”

”ம்ம்… நான் அனுப்பறேன் ஃப்யூச்சர்ல யூஸ் பண்ணிக்கோ”

 

தியானம்

யானை தன் தும்பிக்கையை நீட்டியது.
நானும் கை நீட்டினேன்.
இருவரும் கை குலுக்கிக் கொண்டோம்.
 
மற்ற யானைகளைப் பார்த்து கையசைத்தேன்.
அவையும் தலையாட்டின.
 
ஒரு குட்டி யானை ஓடி வந்து என் கை குலுக்கியது.
 
உட்காரச் சொல்லி சமிக்ஞை செய்துவிட்டு நான் உட்கார்ந்தேன்.
எல்லா யானைகளும் உட்கார்ந்து கண்களை மூடிக் கொண்டன.
 
இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்த குட்டி யானை, சட்டென்று நின்றது. 
எல்லோரையும் பார்த்துவிட்டு, மெதுவாக முன்னால் வந்து உட்கார்ந்து கொண்டது. 
 
வெகு நேரம் அங்கு பறவைச் சத்தம் மட்டுமே கேட்டது.
 
விடைபெரும்பொழுது எல்லா யானைகளையும் நோக்கி கையசைத்துவிட்டுப் புறப்பட்டேன்
 
குட்டி யானை ஓடி வந்து என் கையை மறுபடியும் குலுக்கிவிட்டு கண்ணை ஒரு கணம் மூடித் திறந்தது.