சிறுகதை

எரிந்த கட்சி

-ஸ்ரீதர் நாராயணன்-

மங்கையொரு பங்குடைய சங்கரன் நுதல் விழியால்
மன்மதன் எரிந்த கதை பொய்யா – மெய்யா

ஆர்மோனியத்தின் சுருதியை அனுபவித்தபடிக்கு இலாவணி பாடத்தொடங்கினார். முதலில் விநாயகர் வணக்கம். அப்புறம் குருவணக்கம். பிறகு சுற்றி வந்து சலாம் போட்டபடிக்கு சபை வணக்கம் செய்துவிட்டு, அடுத்த கட்டை சுருதிக்கு தாவுகிறார்.

“இப்படியாகத்தானே………..

ராகவிருந்தன், அனங்கன், காமதேவன் என்றெல்லாம் அறியப்பட்ட மாரவேள்…. தன்னிடம்… வந்து மன்றாடிய மலைமகளாம் இமையவன் புத்திரியின் வேண்டுகோளைக் கேட்டபடிக்கு…..

‘ஆலாலக் கண்டன், சுடுகாட்டு சித்தனிடம் சிந்தையை தொலைத்த பேதையே… நானாகப் போய் எப்படி அவனிடத்தில் காமத்தை கெளப்புவது…. ஆளு ரொம்ப கோவக்காரனாச்சுது… என் ஆயுளுக்கு வந்த அபாயமாச்சுது’ (more…)

ருசி

நரோபா

அந்தப் பொட்டலம் என்னவோ அங்கேயேதான் கிடக்கிறது, சீந்துவாரில்லாமல்.

பட்டணத்து ரயில் நிலையங்கள் ஒரு பிரம்மாண்டமான உயிர்க் காடு. பலரும் தொலைந்துபோன, தொலைத்துக் கொண்ட காடு. எவரையும் கண்கொண்டு பார்க்க முடிவதில்லை, எப்போதும் எவரோ நம்மிடமிருந்து ஏதோ ஒன்றை அடித்துப் பிடுங்கி விடுவார்கள் என்ற அச்சம் நிலைகொண்டிருக்கும். பையை இறுகப் பற்றிக் கொண்டு ஊர் திரும்பக் காத்திருக்கிறேன்.

அத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் அவன் சிக்குவான் என எதிர்பார்க்கவில்லை. நேற்றிரவுதான் கிருஷ்ணமூர்த்தி அவனைப் பார்த்ததாக போனில் சொன்னான். காலையில் கிளம்பிவிட்டேன். ஆவேசமும் கோபமும் உள்ளூர நுரைத்துப் பொங்கின. இரவெல்லாம் நினைப்புகள், கற்பனைகள். அவனை விதவிதமாகச் சிறுமை செய்வது போல், அவமதிப்பது போல், பெரியமனுஷத்தனத்துடன் மன்னிப்பது போல், அவனிடம் கெஞ்சி இறைஞ்சுவது போல், குத்திக் கிழிப்பது போல், பளாரென்று அறைவது போல். உறக்கமின்றி லயித்துக் கிடந்தேன். அவனைக் கண்டதும் என்ன செய்வது என்பதை இனிதான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் அவனைச் சந்தித்தாக வேண்டும். நானிருக்கிறேன், உன்னைக் கண்டுபிடித்துவிட்டேன் என்றாவது அவனுக்கு உணர்த்தியாக வேண்டும். (more…)

திறந்த சாளரம்

Saki (H. H. Munro)

ஹெக்டர் ஹ்யூக் மன்றோ பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் எழுத்தாளர். ‘சகி’ என்கிற புனைப்பெயரில் பல படைப்புகள் எழுதி ஓ ஹென்றி, டோரதி பார்க்கர் போன்றவர்களுடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு கூர்மையான சிறுகதைகள் எழுதியவர். இவர் கதைகளில் காணப்படும் திகில் நிறைந்த அங்கதம் தனித்துவமானது. வெளியாகி நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் The Open Window சிறுகதையின் சுவாரசியம் கடுகளவும் குறையவில்லை. 1986ல் ஷியாம் பெனகலின் இயக்கத்தில், தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘கதா சாகர்‘ தொடரில் இக் கதையும் இடம்பெற்றது.

oOoOoOoOoOoOoO

னது அத்தை சிறிது நேரத்தில் கீழே வந்துவிடுவார் திரு. நட்டல்’, பதினைந்து வயதான, வெகு மிடுக்கான பெண் ஒருத்தி சொன்னாள், “அதுவரை நீங்கள் என்னோடுதான் பொழுதை கடத்த வேண்டும்”

ஃப்ராம்டன் நட்டல் வரப்போகும் அவளுடைய அத்தையை மறக்காமல், எதையாவது நல்லபடியாகச் சொல்லி, அந்த கணத்தின் மகத்தான மருமகளை மகிழ்வுறச் செய்ய தீவிரமாக முயன்றுக் கொண்டிருந்தான். உண்மையில், இப்படியான அறிமுகமில்லாதவர்களை வரிசையாக சந்திப்பதால்,  அவன் அப்போது மெற்கொண்டிருக்கும் நரம்புமண்டல சிகிச்சைக்கு ஏதும் நலம் பயக்குமா என்று பலமாக சந்தேகித்தான். (more…)

திறந்த கதவில் பூட்டு

ஏம்பலத்தானின் முகத்தில் எப்போதும் பார்த்திராத சிரிப்பு படர்ந்திருந்தது. கண்ணில் தெரிந்த விஸ்கியினால் உறைந்த சிரிப்பு என முதலில் நினைத்தேன். சோகையான விளக்குகளில் அவன் முகத்தில் வரிக்குதிரை பதற்றம் அவ்வப்போது பொசிங்கியது. நான் டாவர்ன் பாருக்கு வந்ததும் குடிக்கத்தொடங்கி மூன்றாவது லார்ஜ் வரைதான் காலியாயிருக்க அதற்குள் அண்டை டேபிளில் `மாப்ள, மச்சி` எனக்கூப்பிடும் நான்கு நண்பர்களை சம்பாதித்திருந்தான் சிகரெட் வாங்கக்கூட பணமில்லாத ஏம்பலத்தான். அடிபட்ட தெருநாயின் மெல்லிய தொடர் ஓலம்போல பார் வாசனையை மீறி அவனிடம் மருந்து வாடை.

`கண்ணமெல்லாம் ஆப்பிள் மாதிரி புசுபுசுன்னு எப்படிடா இப்படி இருக்கே?` , என கார மல்லாட்டை ஒட்டியிருந்த ஈர விரல்களால் என் கன்னம் தடவினான். நான் ஊரை விட்டுப் போன நாட்களிலிருந்து அவனது கையில் ஒட்டியிருந்த சாயகட்டை வாசம் அப்படியே இருந்தது. (more…)

வாசவதத்தை – 2

– ஸ்ரீதர் நாராயணன் –

சிந்தாமணி தூபம்
ராஜகிருகம்
சூன்யத்தின் இசை

“அதிகாரம் என்பது செலுத்துவதற்கு மட்டுமல்ல, ஏற்றுக் கொள்வதற்கும் உகந்ததாக இருக்க வேண்டும்” விஷ்ணுகுப்தர் அடிக்கடி சொல்வதுண்டு. பெரும் சுண்ணாம்புக்கற்களைக் அடுக்கி வைத்து, இடைவெளியில் சிறிய கற்களை உடைத்து நிரப்பி, எழுப்பப்பட்டு, இரண்டு அடுக்கு சுற்றுசுவர்களை கொண்ட ராஜகிருகக் கோட்டையைப் பார்க்கும்போதெல்லாம் அவனுக்கு விஷ்ணுகுப்தரின் போதனைதான் நினைவுக்கு வருகிறது. ஹர்யாங்கர்களின் பேரரசனான ஷ்ரேனிகனின் காலத்திலிருந்தே ராஜகிருகம் தன்னுடைய அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டது என்று சொல்கிறார்கள். கோசலம், காசி, பாஞ்சாலம், கலிங்கம், குரு வம்சத்தார், இக்ஷ்வாகுகள், மைதிலர்கள், சுரசேனர்கள், லிச்சாவியரிலிருந்து சிந்துநதி தீரத்து மாத்ரர்கள்வரை ராஜகிருகத்தின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதில் எவருக்கும் சுணக்கம் இருந்ததில்லை. (more…)