சிறுகதை

வாசவதத்தை – 1

– ஸ்ரீதர் நாராயணன் –

 

சிந்தாமணி தூபம்
ராஜகிருகம்
சூன்யத்தின் இசை

‘ஆசையை அறுத்தவர்களுக்கு அரசனாக இருந்தாலும் புல்லைப் போலத்தான். ஆனால் ஆசையின் இருப்புதான் அரசனின் விழுமியங்களில் முதலானது….’ விஷ்ணுகுப்தரின் குரல் அந்த நடுநிசியிலும் தலைக்குள் ஒலித்துக் கொண்டிருப்பது போல் இருந்க்கிறது அவனுக்கு. தலையை உதறி நினைப்பைத் தள்ளியபடிக்கு புரள்கிறான். (more…)

வண்ணத்துப்பூச்சி வரம்

– ஸ்ரீதர் நாராயணன் –

படபடவென சிறகடித்துப் போகும் பட்டாம்பூச்சிகளை பார்க்கும்போதெல்லாம் அவருக்கு அப்படியொரு களிப்பு. தம் கள்ளமில்லா தூய்மையால் அவை பூவுலகை நிறைத்துக் கொண்டிருப்பதாக பெருமை.

காற்றில் தவழ்ந்து வந்து கைமேலேறி அமர்ந்த வண்ணத்துப்பூச்சியை வாஞ்சையோடு தடவிக் கொடுக்கிறார்.

‘சிறு எறும்பு கூட தன் எதிர்ப்பை தெரிவிக்காது இறப்பதில்லை. எந்த ஜீவராசிக்கும் தற்காப்புக்கு போரிடும் நியாயம் உண்டு. பாவம் நீங்கள். இப்படி வலிமையற்ற வெகுளிகளாகவே தேங்கிவிட்டீர்கள். எங்கோ ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது’ (more…)

குழல் புராணம்

– ஆதவன் கிருஷ்ணா

பரண் மேல் கிடைத்த முப்பாட்டனின் கதை:

என் கைகள் அவள் கழுத்தை வளைத்துக் கொண்டிருந்தன. உஷ்ணமான மூச்சுப்பரப்பு அவளின் காதருகே விடப்படும்போது தலை என்ற ஒன்று தனியாக கட்டவிழ்ந்த விலங்கைப் போல தேகப்பரப்பில் மேய்ந்துகொண்டிருந்தது. அவளுடைய நீண்ட கூந்தலை இப்போது கெட்டியாக பிடித்துக் கொள்கிறேன். இந்த நிமிடம் முன்புவரை இவ்வளவு அடர்த்தியான கூந்தலைத் தொட்டுப் பார்த்திருக்கவில்லை. தொட்டுப் பார்க்காமல் இருந்திருக்கலாம்.  கேசத்தின் நெடி நாசிப்புழை எங்கும் பரவியது.

நெடி பரவியதும் சடுதியில் அவளை விட்டு எழுந்தேன்.  அவள் பானையிலிருந்த பண்டம் பொங்கிவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தாள். அந்த நினைப்பின் இடைவெளியில் சமையல்கூடம் சென்று தடித்த அருவாமனை ஒன்றைத் தேடி எடுத்து வந்து அவளுடைய கூந்தலை இழுத்துக் கத்தரித்தேன்.   வெளியில் வந்து சீமெண்ணெய் ஊற்றி அந்த கூந்தலை எரித்தபிறகுதான் என் தனிமையின் அறையெங்கும் நிம்மதி பரவியது.  விடிவதற்கு முன்பாகவே யார் கண்ணிலும் படாமல் அவள் அழுதுகொண்டே தனது தாய் வீட்டுக்குச் செல்வதைப் பார்த்தேன். போகட்டும் என்றே எனக்குத் தோன்றியதால்,  அவளைத் தடுத்து நிறுத்தவில்லை. (more…)

ஆறாம் கயல் – 1

என் ஒன்பது வயதில் ஒரு நீலம் பிரியாத காலைப்பொழுதில் வான்குடி பகுதிக்கு அப்பாவுடன் சென்றேன். அதற்கு முன்தினம் முழுவதும் வழுக்குப்பாறைகள் தாண்டி பயணம் செய்து வந்திருந்தோம். கடுமையான உடல்வலி. விழிகளை முழுவதுமாகத் திறக்க முடியவில்லை. முதல்முறை வான்குடி கிழக்கு வாசலுக்குள் நுழையப்போகிறோம்; கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கு முன்வரை இது சாத்தியமில்லாத பயணம். பாசியும் நுரையும் மிதமிஞ்சிய வழுக்குப்பாறை பகுதிகள் முழுவதும் தீக்கிரை ஆனது போல மர வண்டல்கள் நிரம்பியிருந்தன.

வழி நெடுக நான் அப்பாவை எதுவும் கேட்கவில்லை. அவரது முகத்தில் தெரிந்த கடுமை நான் முன்னெப்போதும் பார்த்திராதது.

(more…)

ஆணழகன் சாம்ராஜ்

ஆதவன் கிருஷ்ணா

சாம்ராஜ் மரணித்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் ஆகின்றன. டைலர் குணா, அர்னால்ட் சேகர், கரீம் பாரூன் முதலியவர்கள் கொண்ட நண்பர் வட்டம் – ஒரு குளம் என்றால் அதில் பெரிய பாறைக்கல்லொன்று விழுந்தால் ஏற்படும் அதிர்வலைகளைப் போல் அவனது தாக்கத்தால் அணைத்துக் கொள்ளப்பட்டவர்களாய் அவனது நட்பு வட்டம் விரியும்.

பல்வேறுபட்ட தொழில்களில் இருப்பவர்களுக்கும் சாம்ராஜே காட்சிப்பொருள். ஏனென்றால் அவனது உடற்கட்டு அதிசயிக்கக்கூடியது. அவனது அசைவுகளைக் கண்டு பொறாமைப்பட்டவர்களை எண்ண முடியாது. அந்த ஜிம்மினுடைய தலைவரே வயிறெரியுமளவுக்கு அவன் உடல் பாகங்கள் இறுகி ஒரு உறுதியான ஆண்மகனின் தோற்றம் பெற்றிருக்கும். (more…)