– ஆதவன் கிருஷ்ணா
பரண் மேல் கிடைத்த முப்பாட்டனின் கதை:
என் கைகள் அவள் கழுத்தை வளைத்துக் கொண்டிருந்தன. உஷ்ணமான மூச்சுப்பரப்பு அவளின் காதருகே விடப்படும்போது தலை என்ற ஒன்று தனியாக கட்டவிழ்ந்த விலங்கைப் போல தேகப்பரப்பில் மேய்ந்துகொண்டிருந்தது. அவளுடைய நீண்ட கூந்தலை இப்போது கெட்டியாக பிடித்துக் கொள்கிறேன். இந்த நிமிடம் முன்புவரை இவ்வளவு அடர்த்தியான கூந்தலைத் தொட்டுப் பார்த்திருக்கவில்லை. தொட்டுப் பார்க்காமல் இருந்திருக்கலாம். கேசத்தின் நெடி நாசிப்புழை எங்கும் பரவியது.
நெடி பரவியதும் சடுதியில் அவளை விட்டு எழுந்தேன். அவள் பானையிலிருந்த பண்டம் பொங்கிவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தாள். அந்த நினைப்பின் இடைவெளியில் சமையல்கூடம் சென்று தடித்த அருவாமனை ஒன்றைத் தேடி எடுத்து வந்து அவளுடைய கூந்தலை இழுத்துக் கத்தரித்தேன். வெளியில் வந்து சீமெண்ணெய் ஊற்றி அந்த கூந்தலை எரித்தபிறகுதான் என் தனிமையின் அறையெங்கும் நிம்மதி பரவியது. விடிவதற்கு முன்பாகவே யார் கண்ணிலும் படாமல் அவள் அழுதுகொண்டே தனது தாய் வீட்டுக்குச் செல்வதைப் பார்த்தேன். போகட்டும் என்றே எனக்குத் தோன்றியதால், அவளைத் தடுத்து நிறுத்தவில்லை. (more…)