சிறுகதை

ஸ்டிக்கர் பொட்டு

சத்யராஜ்குமார்

photo

வித்யா ரங்கா மாமாவிடம் ஆசையாய் உட்கார்ந்து பேசுகிறாள் என்று முரளிக்குத் தோன்றியது. அவரும் வித்யா மேல் அநாவசியமாய்க் கரிசனம் காட்டுகிறார். இவர் ஏன் அமெரிக்கா வந்தார் என்று முரளிக்கு எரிச்சலாக இருந்தது.

அவன் ஆஃபிசிலிருந்து திரும்பியபோது சமையலறையை ஒட்டிய டெக்கிலிருந்து பெரும் சிரிப்புச் சத்தம் கேட்டது.

வித்யா காற்றில் சைன் வேவ் போலப் பரவி அசையும் கூந்தலை நளினமாய் ஒதுக்கி கொஞ்சம் வெட்கம் கலந்த குரலில் சிரித்துக் கொண்டிருந்தாள். ரங்கா மாமா அப்படி என்ன ஜோக் அடித்தாரோ.

அவர் இங்கே இருக்கப் போவதே மொத்தம் நான்கு நாட்கள்தான்.

யாரிடமும் உடனே வளவளவென்று பேச ஆரம்பித்து விடுவார். பி.ஹெச்.இ.எல்லில் ஜியெம்மாக இருந்து ரிட்டயராகிய கையோடு சும்மா இருக்காமல் உதிரி பாகங்கள் ஏற்றுமதி செய்யும் கம்பெனி ஆரம்பித்து – இப்போது பிசினஸ் காரியமாய் அமெரிக்கா வந்திருக்கிறார்.

டெக்ஸாஸில் அவர் நண்பரின் வீட்டில் பத்து நாள் தங்கி ஆயில் கம்பெனி வேலைகள். அவை முடிந்த கையோடு பழைய சொந்தம் விட்டு விடக் கூடாது என்று ஈஸ்ட் கோஸ்ட்டில் இருக்கும் முரளி வீட்டுக்கும் விசிட். (more…)

நீராம்பல்

ஸ்ரீதர் நாராயணன்

‘ங்க வாடா வெளக்கெண்ண கருப்பா… வெண்ணெவெட்டி சாம்பிராணி… கதயா எளுதற… &*#$(#$% மவனே’ என்று பாலமுருகனின் முடியைப் பிடித்து உலுக்க ஆரம்பித்தார் கோவிந்தன். கடைசி வார்த்தை பாலமுருகனின் தந்தையின் ஒழுக்கத்தை சாடும் ஒரு கொச்சை வசவு. அதைக் கேட்டதும் வகுப்பில் விடலை பையன்கள் கிளுகிளுத்து சிரித்தார்கள். அவர்கள் தனித்திருக்கும்போதே சொல்லத் தயங்கும் வசவுச் சொல்லை வாத்தியார் ஒருவர் சரளமாக பயன்படுத்துகிறார் என்றால் கேட்க வேண்டுமா. இன்னும் என்னவெல்லாம் வருமோ என்று பேராவலோடு காத்திருந்தனர்.

கோவிந்தனுக்கு காலையில் எழுந்ததில் இருந்து எரிச்சலாகத்தான் இருந்தது. எரிச்சலென்றால் செண்டு முளை கன்றிப்போய் வெளிக்கிளம்பிய எரிச்சல். உட்காரவும் முடியாமல் நடக்கவும் முடியாமல் கால்களை அகட்டி அகட்டி வைத்து பள்ளிக்கூடத்திற்கு நடந்து வந்துகொண்டிருக்கும்போது எவனோ ஒரு கபோதி சைக்கிளில் கைகளை தொங்கவிட்டபடி சிகரெட்டை புகைய விட்டுக்கொண்டே பறந்தடித்துக் கொண்டு போனான். ரோட்டில் தேங்கியிருந்த மழைநீரை வாரியடித்ததில், வலப்பக்க சட்டை முழுவதும் கறையாகிப் போய்விட்டது. கால்மணி நேரம் தாமதமாக பள்ளிக்கூடத்திற்குள் வந்தவரைப் பார்த்ததும் வாசலிலேயே நின்றுகொண்டிருந்த ஹெச் எம், கேட்டார். (more…)

பாம்புப் படலம்

– எஸ். சுரேஷ் –

“மாமி இங்க வாங்கோ. சீக்கிரம் வாங்கோ” என்று மீனா மாமியின் குரல் கேட்டது.

“என்ன ஆச்சோ. மாமி இப்படி கத்தறா” என்று கூறிக்கொண்டே அம்மா முன் பக்கம் சென்றாள். நானும் அம்மாவுடன் சென்றேன். நாங்கள் அப்போது சிகந்திராபாத் நியூ போயிகுடாவில் ஒரு பெரிய வீட்டின் பின்பக்கத்தில் குடியிருந்தோம் பத்மநாபா மாமாவும் முன் பக்கத்தில் இருந்தார்கள். அவர்கள் இந்த வீட்டிற்கு சொந்தக்காரர்கள்.

“என்ன ஆச்சு மாமி?” என்று அம்மா மீனா மாமியைக் கேட்டாள்.

“பாம்பு வந்திருக்கு மாமி”

“பாம்பா? எங்க?”

“அதுக்குள்ள இருக்கு,” என்று மீனா மாமி வாட்டர் மீட்டர் இருக்கும் குழி பக்கம் கை காட்டினாள். வாட்டர் மீட்டர் இரண்டடிக்கு இரண்டடி சதுர, பக்கவாட்டில் சிமெண்ட் பூசப்பட்ட குழிக்குள் இருக்கும். அந்தக் குழியின் மேல் சதுரமான தகர மூடி இருக்கும். அது சரியாக\ குழியின் மேல் உட்காராததால் குழிக்கும் மூடிக்கும் நடுவிலிருந்த இடைவெளி வழியாக பாம்பு உள்ளே சென்றுவிட்டது, (more…)

போயிகுடாவின் மாரடோனா

– எஸ். சுரேஷ் –

“மாரடோனா ஆடினத பாத்தீங்களா பாய்? ஒருத்தனா இருந்து ஜெர்மனிய தோக்கடிச்சிருக்கான் பாருங்க. என்ன ஆட்டம் நேத்தி. நம்ப எப்போதான் புட்பால் சூப்பர் பவர் ஆவோமோ. எப்போதான் நம்ப ஊர்ல ஒரு மாரடோனா பிறப்பானோ?” என்று ஆதங்கத்துடன் பஷீர் பாயைக் கேட்டேன். இரவு நாங்கள் எல்லோரும் அர்ஜென்டினா – ஜெர்மனி உலக கோப்பை இறுதி ஆட்டத்தை பார்த்தபின் மாரடோனாவின் மேல் எங்கள் எல்லோருக்கும் மரியாதை பெருகியிருந்தது.

“நம்ப ஊர்ல என்னடா? நம்ப காலனியிலேயே ஒரு பெலே, ஒரு மாரடோனா அளவுக்கு ஆடற ஒரு ஆள் இருந்தான்னு உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார் பஷீர் பாய்.

“நம்ப போயிகுடாலையா?” என்று ஆச்சரியமாகக் கேட்டான் புஜ்ஜி

“ஆமாம். போயிகுடாலதான். உங்களுக்கு எல்லாம் தெரிஞ்ச ஆளுதான்” என்றார் பஷீர் பாய் (more…)

உடைநீர் ஓசை

ஸ்ரீதர் நாராயணன்

 

‘மாலி வந்திருக்குடா… வெரசா வெளில வா’ வெளியிலிருந்து அம்மா கத்தியது கீழே மெடிக்கல்ஷாப்வரை கேட்டிருக்கும். காசி கையில் புரட்டிக் கொண்டிருந்த புத்தகத்தை வேகமாக சுருட்டி சோப்புத்தூள் டப்பாவின் பின்னால் செருகி வைத்துவிட்டு எழுந்து நின்று கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டான். ராஜமாணிக்கம் கொடுத்த புத்தகம் அது. வழவழ பேப்பர்களில் விதவிதமான போஸ்களில் படங்களை என்னமாய் ப்ரிண்ட் செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு தினுசு. பொன்னிறக்கூந்தல் பெண்கள். செந்நிற கிராப்புத் தலைப் பெண்கள். ஒல்லி இடுப்பு பெண்கள். பெருத்த உடலைக் கொண்ட பெண்கள்.

‘ஒருநாளப் போல இப்படித்தாம்மா. பாத்ரூமுக்குள்ள போன ரெண்டவர் ஆக்கறான். என்னடா பிரச்னைன்னு சள்ளு புள்ளுன்னு எரிஞ்சு விழறான். எதாச்சும் சொல்பேச்ச கேட்டாத்தான. உடம்பு கிடம்பு சுகமில்லன்னா வைத்தியம் பாக்கதாவல’ அம்மாவின் பிலாக்கணம் காசியை அவசரப்படுத்த, கண்ணாடியில் தெரிந்த பிம்பம் குளித்தமாதிரிதான் இருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டு வேகமாக வெளியில் வந்தான். (more…)