பிற

பதாகை சிறுகதை போட்டி – 2015: பெறப்பட்ட சிறுகதைகளின் பெயர்ப்பட்டியல்

பதாகை சிறுகதை போட்டி – 2015க்கு பெறப்பட்ட சிறுகதைகளின் பெயர்ப்பட்டியல் (இதில் விடுபடல் இருப்பின் editor@padhaakai.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்)-

அகத்திணை

அன்பு என்பதே தெய்வமானது

அதிசய மீன்

அழகிய தருணங்கள்

ஈன்ற பொழுதினும்

எங்க ஊரு பெருசுக

இரண்டு தலைமுறைகள்

இரண்டு தோசைகள்

இரட்டைக் கையுறை

காமத்தில் திளைத்த இரவு

காத்திருந்தவள்

கடலை நீந்திக் கட

கணக்கு

மாசாவின் கரங்கள்

மாலைப்பொழுதின் நிறம்

மன்மதராசா

மறு இணைவு

மூன்றாம் மழை

நாமே நமக்கு

நல்லார் பொருட்டும் பெய்யும் மழை

நல்லதோர் வீணை செய்தே

நட்ட கல்லும் பேசுமோ

நிகழ்தகவுகள்

பாட்டியும் பேத்தியும்

படம்

பிழை

சந்தை

சிதறல்

சுரேஷ் என்கிற அமுதா

சுழல்

தாலாட்டு

தடுத்தாட்கொண்ட கடவுளற்றவர்

உண்டி சுருக்குதல்

உயிர்

வண்ணத்துப் பூச்சிகளின் கோவில்

வட்டம்

விடுப்பு

விலை

விருது

யுக சந்தி?

கபாடபுரம்- இணையத்தில் ஒரு புதிய இலக்கிய இதழ்

நல்வரவாகுக.

கண்ணைக் கவரும் வடிவமைப்புடன் துவங்கியிருக்கிறது, கபாடபுரம், சமூக – இலக்கிய இணையதளம். புதுமைப்பித்தனின் சாகச வாக்கியங்களை முகப்பில் தாங்கி வந்திருக்கிறது, அதன் முதல் இதழ்.

“வாக்கியத்துக்கு உயிருண்டு. அது பல தசைகளும், நரம்புகளும், அவயவங்களும் கொண்ட சிருஷ்டி. அதை நாம் உம்மைத் தொகுதிகளால் பிணிக்கப்பட்ட வெறும் வார்த்தைச் சங்கிலிகளாக மதித்துவிடக் கூடாது. வாக்கியத்தின் கட்டுக்கோப்பு (Architectonics) மிகவும் முக்கியமானது. ஒரு வாக்கியத்தில் வார்த்தையின் ‘அமைப்பு’ நயமான அர்த்த விசேஷங்களைத் தந்துவிடும். வாக்கியங்களின் (Prose-rhythm) ஓசை இன்பம் – கவிதையைப் போல் வசனத்திலும் இருக்கிறது; ஆனால் அதைவிட சூக்ஷ்மமானது – வார்த்தை நயங்களையும், வாக்கியத்தின் ‘அமைப்பு’ வசீகரத்தையும் பொறுத்தே இருக்கிறது. இதைப் பற்றி எழுத முடியாது; பயிற்சியினாலும், மேதாவிகளின் நூல்களைப் படித்துப் படித்து அனுபவிப்பதினாலும் வரும். தமிழில் இதற்கு இலக்ஷிய கர்த்தாக்கள் அவ்வளவாக இல்லை. வெளியிலிருந்து தான் ஆகர்ஷிக்க வேண்டும். சிலர் மோனைகளையும் பிராசங்களையும் வசனத்தில் உபயோகிப்பது ஓசை இன்பம் என்று நினைக்கிறார்கள். என்னமோ, அசுணப் பறவையையும் பறை முழக்கத்தையும் பற்றி கம்பன் சொன்ன கதைதான் நினைவிற்கு வருகிறது. அப்படி எழுதுவது ஆபாசம்; பேசுவது பைத்தியக்காரத்தனம்.”-

20150404

IMG-20150404-WA0008

ஒளிப்படம்- விக்டர் லிங்கன்

மௌனம்

எங்கள் மௌனம் யாருக்கும் கேட்காது; எனினும் பேச்சுரிமை மறுக்கப்பட்ட எழுத்தாளர் பெருமாள் முருகனின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், அவரது மௌனத்தில் பதாகையும் பங்கேற்கிறது. ​

​ஓர் அடையாளச் செய்கையாக, வரும் வாரம் பதாகை வராது.

நித்ய கன்னி – ஆங்கில மொழிபெயர்ப்பாளர் எஸ் சுரேஷ் குறிப்பு

(கருத்து சுதந்திரம் அனைத்து திசைகளிலிருந்தும் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நித்யகன்னி நாவலை தான் எழுத நேர்ந்தது குறித்து எம் வி வெங்கட்ராம் முன்னுரையில் இவ்வாறு எழுதுகிறார்-

“பெறற்கரிய பேறு பெற்றாள் மாதவி என்னும் பெண்.

“மகவு ஈன்றதும் இழந்த கன்னித்தன்மையைத் திரும்பப் பெறும் பேறுதான் அது. அதன் பயனாக மூன்று அரசர்களையும் ஒரு முனிவரையும் மணந்து, நான்கு குழந்தைகளைப் பெற்று, பெற்ற இடத்திலேயே அவைகளை விடுத்து- கன்னியாகவே தந்தையிடம் திரும்புகிறாள் அவள். அவளுக்கு சுயம்வரம் வைக்க விழைந்த தந்தையின் விருப்பத்தை மறுத்து நித்யகன்னி காட்டுக்குத் தவம் செய்யக் கிளம்பினாள் என்று பாரதம் கூறுகிறது.

“நான் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன்; மனித இனத்துக்குப் பெரும் பேறாக இருக்க வேண்டிய அணுசக்தி அசுரசக்தியாக உலகை வதைக்கும் கொடுமையைக் கண்டவன்! வரபலத்தால் இன்பமாக வாழவேண்டிய மாதவி, கானகத்துக்குத் தவம் இயற்றப் போகும் அளவு விரக்தி கொண்டதைக் கண்டு அவள்பால் பரிவு கொண்டேன். இந்தப் பரிவைச் சுற்றித்தான் கதையை வளர்த்தேன்”

(more…)