![]()
“ஒரு சாதாரண வாழ்கையை வாழ்ந்த சாதாரணர் இவர் என்று தோன்றுகிறது இல்லையா?” என்று பிராங்க் மக்கோர்ட் பற்றி கேட்கிறார் அஜய், “60 வயது வரை சாதாரண வாழ்க்கை வாழ்ந்த மக்கோர்ட் தன் நூல்களின் வெற்றியால் பிரபலமாகிவிட்டார். வாழ்க்கை அனுபவங்களா, அவற்றைச் சொல்லும் முறையா அல்லது அவற்றை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதமா, எது ஒருவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது அல்லது அவர்களுடன் ஒன்ற வைக்கிறது?” . அவரது கட்டுரையைப் படிக்கும்போது மக்கோர்ட்டின் பால்யகால ஏழ்மையும் அவரது தாயின் போராட்டங்களும்தான் முக்கியமாகத் தெரிகின்றன. சமூக, பொருளாதார சீர்கேடுகளால் பாதிக்கப்படும் அம்மாக்களும் பிள்ளைகளும் உலகெங்கும் ஒன்று போலவே இருக்கின்றனர்.
பிராங்க் மக்கோர்ட் Academy of Achievement என்ற தளத்தில் அளித்த நேர்முகத்தில் அவர் தன் இளம் பருவ நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட பகுதிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழாக்கம் இது:
உங்கள் குழந்தைப்பருவம் எப்படிப்பட்டதாக இருந்தது?
ஒரு வகையில் செறிவானதாக இருந்தது. நாங்கள் மிகக் கடுமையான ஏழ்மை நிலையில் இருந்தோம். பொருளாதார தளத்தில் மிகத் தாழ்ந்த நிலைக்கும் கீழிருந்தாலும், நாங்கள் எப்போதும் உற்சாகமான மனநிலையில் இருந்தோம். எதிர்பார்ப்பதற்கு நிறைய இருந்தது, நம்பிக்கை வைப்பதற்கு நிறைய இருந்தது, அடைவதற்கு நிறைய இருந்தது, கனவுகாண நிறைய இருந்தது என்ற பொருளில் எங்கள் குழந்தைப்பருவம் மிகச் செறிவாக இருந்தது, ஆனால் பொருளாதாரச் சூழல் மிக மோசமாக இருந்தது. மழைக்கால கல்கத்தா என்று சொல்லலாம். கல்கத்தாவிலாவது வெம்மை இருக்கிறது. (more…)

