டெகாமரான் கதைகளில் மூன்றாம் நாளன்று ஃபியாமெட்டா ஒரு கதை சொல்கிறாள். ஹிதோபதேசத்தின் லத்தீன் மொழிபெயர்ப்பிலிருந்து பொகாஷியோ கையாண்ட கதை அது. இதில் தான் விரும்பும் மணமான ஒரு பெண்ணை பொது குளியலறையில் சந்திக்க திருட்டுத்தனமாகத் திட்டமிடுகிறான் ஒருவன். அங்கே, இருட்டில் அவளது கணவனாக நடித்து அவளைக் கற்பழிக்கிறான். தான் ஏமாந்துவிட்டதை அறிந்தபின் அந்தப் பெண்ணுக்கு தான் நேசிக்கும் தன் கணவனை ஏமாற்றுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போகிறது – இதிலுள்ள வெட்கமும் சீரழிவும் அவளுக்கே உரியது, அவளைக் கற்பழித்தவனுக்கல்ல. இன்றும் கார்டியனோ அல்லது வேறு பல செய்தித்தாள்களைப் படித்தாலும் 650 ஆண்டுகளுக்குப்பின், ஹிதோபதேசம் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், 900 ஆண்டுகளுக்குப்பின், நம்மால் இந்தக் கதையைக் காண முடிகிறது. ஏமாற்றப்பட்ட பெண், கடெல்லா, கற்பழித்தவன் அறிந்த உண்மையை உணர்ந்திருக்கிறாள்: இன்று நாம் வாசிக்கும் இளம் பெண்களைப் போலவே, ஏமாற்றப்பட்ட குற்றத்துக்காக அவள் தண்டிக்கப்படுவாள் அல்லது கொல்லப்படுவாள். அவளது நோக்கங்கள் ஒரு பொருட்டல்ல. ஆனாலும் என்ன? Plus ça change, plus c’est la même chose, என்று நாம் சொல்லலாம். ஆனால், அந்த மிக முக்கியமான கேள்வியின் காரணத்தால், நாம் அதைச் செய்வதில்லை. (more…)