விமர்சனம்

கவியின்கண் – 1 “எத்திசை செலினும் அத்திசைச் சோறே”

– எஸ். சுரேஷ்-

​மன்னன் நெடுமான் அஞ்சியின் அரண்மனை வாயிற்காவலனை நோக்கி ஔவை பாடியதாக ஒரு புறநானூற்றுப் பாடல் உண்டு:

வாயி லோயே! வாயி லோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறி யலன்கோல்? என்னறி யலன்கொல்?
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென
வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்,
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;
மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே. (more…)

கவிதையாக்கம் – விக்ரமாதித்யன்

(1987ஆம் ஆண்டு குற்றாலம் கவிதைப்பட்டறையில் வாசிக்கப்பட்டு நட்புறவுப்பாலம் இதழில் திருத்தி எழுதப்பட்ட கட்டுரையின் பகுதி)
வாழ்க்கைப் பார்வையில் மனவேகம் ஆத்மவிசாரமாக மாற்றம் பெறும்போது, உணர்வுகளும் தத்துவக்கோலம் கொண்டு விடுகின்றன என்பது என் அனுபவம்.
 
ஒரு கவிஞன் தன்னியல்பாகவே சிந்தனையாளனாகவும் இருக்கிறான்; தனக்கு வாய்க்கப்பெற்ற உள்ளுணர்வினால் விஷயங்களை ஊகித்து அறிந்து கொள்கிறான்; தர்க்கரீதியாகவோ காரண காரியங்கள் வழியாகவோ அல்லாமல், புலன்கூர்மை காரணமாகவே சூட்சுமமாக உணர்ந்து கொள்கிறான். ஒரு கட்டத்துக்குப் பிறகு, யதார்த்தங்கள் வெறும் விழுதுகள்தாம் என்று கண்டுகொள்கிறான்; அடிப்படையான உண்மைகள் என்கிற வேர்கள் அவனுக்கு மலைப்பைத் தருகின்றன. அப்போது உணர்வுக் கொந்தளிப்புகள் அடங்கி, தத்துவப்பார்வை ஏற்பட்டு விடுகிறது; சமவெளியில் இறங்கிய நதி போல் ஆகிறது அவன் கவிதை. என் சமீபத்திய கவிதைகள் பலவும் அதுபோலத்தான். இங்கே இரண்டு எடுத்துக்காட்டுகள்:

(more…)

அறம் சிறுகதைகள் – இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பார்வை

வெ. சுரேஷ்

நான் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே புத்தக வாசிப்பு பழக்கம் கொண்டவன். இரண்டாவது, மூன்றாவது படிக்கும்போதே முத்து காமிக்ஸ், அம்புலிமாமா  ஆகியவற்றைப் படித்த நினைவிருக்கிறது. பலே பாலுவும்  இரும்புக்கை மாயாவியும் என் மிக இளமை நினைவுகள். இது அப்படியே வளர்ந்து ஒரு 18 வயதிலிருந்து தீவிர இலக்கியம் என்ற  பிரிவிலிருந்த புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன். அது இன்றும் தொடர்கிறது. ஆனால் ஒருபோதும் படித்ததைக் குறிப்புகள் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றோ அதைப் பற்றி எழுத வேண்டும் என்றோ  தோன்றியதே இல்லை.

பிறகு சென்னையில் பணியாற்றும்போது அமைந்த ரூம் மேட்ஸின் சகவாச தோஷத்தால் எக்ஸ்பிரசுக்கு இரண்டொரு வாசகர் கடிதங்கள் எழுதி பிரசுரமாயிற்று, அதிலேயே பரம திருப்தி அடைந்து அதோடு எழுதுவதை விட்டாயிற்று, எழுதும் நேரத்தில் ஏதாவது படிக்கலாம் என்றே தோன்றும். எத்தனையோ நண்பர்கள்  நீண்ட உரையாடல்களுக்குப் பின், ‘என்னிடம் இப்போ பேசியதை எல்லாம் எழுதினால் என்ன?” என்றும், ‘அவசியம் எழுத வேண்டும்,’  என்றும் சொன்னதுண்டு. இருந்தாலும் சோம்பலும் எழுதும் நேரத்தில் படிக்கலாம் என்ற ஆசையும் என்னை எழுத விடவில்லை  எழுத்தாளர்களை நேரில் சந்தித்து உரையாடுவது குறித்தும் ஒரு தயக்கம்  இருந்தே வந்தது. சுஜாதா வேறு ஒரு நல்ல வாசகன் என்பவன் வாசகர் கடிதம் எழுதவோ எழுத்தாளனை நேரில் சந்திக்கவோ மாட்டான்  என்று எங்கோ எழுதிவிட்டார். (more…)