விமர்சனம்
6174 – க.சுதாகர்
திரைத்துறையில் ஒரு படம் வெற்றி பெற்றால் அதே பாணியில் பல படங்கள் வெளிவருவது போல எழுத்து/ பதிப்புத்துறையிலும் ‘read-alikes’ என்றழைக்கப்படும் புத்தகங்கள் உண்டு. உதாரணமாக சமீபத்தில் ‘Amish Tripathi’யின் ‘Shiva Trilogy’ நாவல்களின் வெற்றிக்குப் பிறகு அதே போல் நம் புராணங்கள்/இதிகாசங்கள் சார்ந்து, அவைஅவற்றில் நடந்ததாகக் கூறப்படும் காலக்கட்டத்தைக் கதைக்களனாய் கொண்டு எழுதப்படும் நாவல்கள் அதிகம் இந்திய ஆங்கிலத்தில் வெளிவருகின்றன (இந்திய vernacular பொது இலக்கியத்தில் இப்படி புராணங்களை/இதிகாசங்களை மறுஉருவாக்கம் செய்வது எப்போதும் இருந்து வந்துள்ளது என்றாலும் இப்போது இந்திய ஆங்கிலத்தில் வருபவை ஒரு புதிய ழானராகவே மாறி உள்ளன).
டான் ப்ரௌனின் ‘டா வின்சி கோட்’ நாவலின் வெற்றிக்குக் பிறகு அதுபோலவே பல நாவல்கள் வெளிவந்து, அவை ‘ancient conspiracy theory’ நாவல்கள் என்றும் வகைபடுத்தப்பட்டு ஒரு குடிசைத் தொழில் போலவே ஆயின. இந்த வகை நாவல்கள் முன்பே வந்து கொண்டிருந்தன என்றாலும் ப்ரௌனின் வெற்றிக்குப் பிறகே அதிகமாக கவனத்துக்கு வந்தன (ப்ரௌனின் pet theoryஆன ‘Illuminati குறித்து ‘The Illuminatus! Trilogy’ எழுபதுகளில் வெளிவந்தன. Ecoவின் இன்ன வகைமை என்று வரையறுக்க முடியாத ‘Foucault’s Pendulum’ நாவலில் conspiracy theoryக்கள் பகடி செய்யப் படுகின்றன). (more…)
கவியின்கண் – 3 “உயவுநோய் அறியாது”
உயவுநோய் அறியாது
முட்டு வேன்கொ றாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்
டாஅ வொல்லெனக் கூவு வேன்கொல்
அலமர லசைவளி யலைப்பவென்
உயவுநோ யறியாது துஞ்சு மூர்க்கே.
ஔவை, குறுந்தொகை, 28 (more…)
சமகால கவிதைகளின் சிக்கல் – ரேமண்ட் ஹாரிஸ் நேர்காணல்
The New York Quarterly என்ற கவிதை காலாண்டிதழ், மற்றும் New York Quarterly Books என்ற அச்சு நூல்களின் பதிப்பாசிரியர் ரேமண்ட் ஹாமண்ட். இவர் பலரால் மதிக்கப்படும் கவிஞரும்கூட. Poetic Amusement என்ற விவாதநூல் எழுதியவர். இவரோடு அனிஸ் ஷிவானி நிகழ்த்திய ஒரு மின்னஞ்சல் நேர்முகத்தின் சிறு பகுதி இங்கு தமிழாக்கப்படுகிறது. நேர்முகத்தின் முழு ஆங்கில வடிவை இங்கு வாசிக்கலாம் .
பழகிய பாதைகளில் பயணிக்கும், மரபார்ந்த அச்சிதழ்களில் துவங்கி, avant garde இணைய இதழ்கள் வரை எண்ணற்ற இலக்கிய இதழ்கள் இருக்கின்றன. The New York Quarterlyயின் தனித்தன்மை என்ன? வேறெங்கும் கிடைக்காத எது உங்கள் இதழின் கவிதை வாசகர்களுக்குக் கிடைக்கக்கூடும்? ரோலிங் ஸ்டோன் ஒரு முறை அமெரிக்காவின் சிறந்த கவிதை பத்திரிக்கை என்று The New York Quarterlyயை அழைத்தது. அவர்களுக்கு இப்போதும் கவிதையில் ஆர்வம் இருக்கிறது என்று வைத்துக் கொண்டால், இன்றும் உங்களைச் சிறந்த பத்திரிக்கையாகக் கருதுவார்களா?
சிறந்த பத்திரிக்கை என்று எங்களைச் சொல்லக்கூடாது என்று நினைக்கிறேன். விசாலமான பார்வை கொண்ட இதழ் என்றோ, பரந்துபட்ட படைப்புகளுக்கு இடமளிக்கும் இதழ் என்றோ, அதிக அளவில் சாதாரண வாசகர்களால் வாசிக்கப்படும் பத்திரிக்கை என்றோ சொன்னால் நன்றாக இருக்கும். ‘சிறந்தது’ என்று சொல்லும்போது உயர்ந்தது என்ற பொருள் வருகிறது. அப்படிப்பட்ட ஒரு தீர்மானம் தனி நபர் ரசனை சார்ந்த முடிவு என்பது நம் எல்லாருக்கும் தெரியும் – அல்லது நமக்கு அது தெரிந்திருக்க வேண்டும். இதைச் சொன்னாலும், அவர்கள் அன்று அவ்வாறு அழைத்த நாள் முதல் இன்றும், உயர் அடுக்கில் உள்ள இலக்கிய இதழ்களுக்கு இணையான இடத்தில்தான் நாங்கள் இருக்கிறோம் என்றுதான் நான் நினைக்கிறேன். (more…)
கவியின்கண் – 2 “கொள்வன் கொல்லோ?”
அதியமான் நெடுமான் அஞ்சிக்காக ஔவையார் பாடியதாக இது-
இல்லா கியரோ, காலை மாலை!
அல்லா கியர், யான் வாழும் நாளே!
நடுகல் பீலி சூட்டி, நார்அரி
சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ-
கோடு உயர் பிறங்குமலை கெழீஇய
நாடு உடன் கொடுப்பவும் கொள்ளா தோனே?
(புறநானூறு – 232) (more…)