ஸ்ரீதர் நாராயணன்

இளைப்பாறுதல்

ஸ்ரீதர் நாராயணன்

image1

மூலக்கடை பிள்ளையார் கோவில் பக்கமாக வரும்போது சிக்னலில் சிவப்பு விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தது. ‘சிக்னல் போட்டிருக்கு’ என்று சாந்தலட்சுமியின் காதுகளில் கேட்கும்படி முணுமுணுத்துவிட்டு சிவசுப்ரமணியன் வேகமாக பஸ்ஸின் படிக்கட்டுகள் பக்கமாக வந்தான். எதிர்பார்த்தது போல டிரைவர் வேகத்தைக் குறைக்க சட்டென குதித்து இறங்கினான். பின்னாடியே தடதடவென சாந்தலட்சுமி இறங்குவதற்குள் பஸ் வேகமெடுத்து விட்டது. அந்த மதிய நேரத்தில் நூறடிச்சாலை வெறிச்சோடி இருந்ததால், டிரைவர் வேகமெடுத்தபடி சிக்னலைத் தாண்ட, பஸ்ஸிலிருந்து குதித்த சாந்தலட்சுமி கொஞ்சம் தூரம் ஓடி சமாளித்து நின்றாள்.

‘த, விழுந்து சாவறதுக்குனு வந்துக்குது பாரு. ஸ்டாப்பிங்ல இறங்கி நடந்து வாறதுக்கு என்னா கேடு’ கண்டக்டர் தலையை நீட்டி திட்டுவது சிவசுப்ரமணியன் காதுகளில் நன்றாகவே கேட்டது.

‘பேமானி. ரெட்ல கிராஸ் பண்ணிட்டு, என்னா சவுண்டு விடறான்’ சாந்தலட்சுமியின் குரல் பஸ்ஸை எட்டியிருக்காது என்றாலும், சாலையோரத்து இளநீர் கடைக்காரரின் காதுகளை எட்டியிருந்தது அவருடைய சிரிப்பின் மூலம் தெரிந்தது.

‘அதான், ஸ்பீடு கூட்டிக்கிறான்ல. என்னாத்துக்கு குதிக்கிற நீயு?’ (more…)

எறும்பு வீடுகள்

childimage

எறும்புகளை வளர்க்க என
சிறிய நெகிழி பெட்டிகளில்
கண்ணாடி மூடிகள் கொண்ட
சச்சதுர வீடுகள் அவை.

ஒவ்வொன்றிலும் காற்றுபோக்கியாக
சிறு துளைகளும் உண்டு.

அவற்றின் வழியே வந்து போகும்
எறும்புகள் ஒவ்வொன்றுக்கும்
ஒரு பெயரும், குடும்பமும்
கண்டுபிடித்து வைத்திருந்தாள்

நுணுக்கிய சர்க்கரை
இணுக்குகளை சேர்த்து
வைத்துக் கொள்ள ஓரத்தில்
சிறு மூலையும் உண்டு.

எறும்புகள் வந்து சேர
தாமதமாகும்போது
தேடிப்பிடித்து கொண்டுவந்து
சேர்ப்பார்கள்
அவளும் அண்ணனும்.

குளிர்காலங்களில் மட்டும்
முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில்
வெறிச்சோடிக் கிடக்கின்றன.

அவற்றை உள்ளங்கையில் ஏந்தி
உதடுகளால் ஊதி
கதகதப்பாக்குகிறாள்.

சாரிசாரியாக வந்து நிறைக்கின்றன
நெகிழ்ச்சியின் தருணங்கள்.

எஞ்சிய சாம்பலிலிருந்து…

ஸ்ரீதர் நாராயணன்

bookashes

ஒரு சொல்லை மட்டும்
பிரித்தெடுத்து கொண்டு
எங்கே போகிறாய்?

எழுதியது மொத்தமும் உனக்குத்தான்.
எல்லாவற்றையும் எடுத்து சென்று
எரிதழலில் இட்டுவிடு.

எழுத்தை சூழும் நெருப்பு
தின்று தீர்க்கட்டும்
உன்னையும் என்னையும்!

மாதொருபாகன் நூலுக்கான எதிர்ப்பை தொடர்ந்து நடக்கும் சர்ச்சையை ஒட்டி நிறைய அலசல்களும் கருத்து பரிமாற்றங்களையும் கவனிக்கிறோம். அழிப்பதற்காக இட்ட நெருப்பே அந்த எழுத்தை பெரும் வீச்சோடு பரப்பிச் செல்கிறது. எஞ்சிய சாம்பலிலிருந்து சில கேள்விகளும் அதற்கான விளக்கங்களையும் இப்படி தொகுத்து வைத்துக் கொள்ளலாம்.

இலக்கியம் என்பதற்கான வரையறை என்ன? இன்றைய புனைவுகள் நாளைய கலாச்சார, சமூக ஆவணமாக பேசப்படும் என்றெல்லாம் சொல்கிறார்கள். அத்தகைய படைப்புகளுக்கு கட்டுபாடுகள் தேவையில்லையா? (more…)

விரல் கணக்கு

ஸ்ரீதர் நாராயணன்

counting_with_fingers2

சின்னஞ்சிறு விரல்களை
விரித்து மடக்கி கணக்கிட்டு
அடுத்த செவ்வாய்க்கிழமை
தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டம்
என அறிவிக்கிறாள்.

சிரிக்கும் அவர்களையும்
சேர்த்துக்கொண்டு
ஊதிய பலூன்கள் ஓடி ஓடி வெடிக்கிறாள்.

பாலேடு வழியும் கேக்குகளை
விரலால் வழித்து நக்குகிறாள். (more…)

ஈனி மீனி மைனி

ஸ்ரீதர் நாராயணன்

eenie_minie

சட்டென நீட்டிய இடக்கையை
புறம்தட்டிவிட்டு
வலக்கையை இழுத்து
ஒருகவளம் சோற்றை வைக்கிறாள்,
அம்மா.

அடுத்த கவளத்திற்கு,

ஈனி மீனி மைனி மோ
கேட்ச் த மங்கி பை த டங்கி
என்று மிழற்றியபடி
இடக்கையில் வந்து நிறுத்திவிட்டு,

அம்மாவிற்கு என்றொரு அரைக்கண
புன்னகையை தந்துவிட்டு
சட்டென வலக்கையை நீட்டுகிறது.

என்றோ இடுப்பு எலும்பு நோக
உந்தித்தள்ளிய உயிர்விதையை
வாரியணைத்து மீண்டும்
வயிற்றில் இட்டுக்கொள்கிறாள்.

எந்த கணக்கு போட்டுத்தான்
என்னிடம் வந்தாயோடி