– அஜய் ஆர். –
அதிகாரம் என்பது நாட்டின் தலைவராகவோ, அல்லது வேறு உயர் பதவியில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்கையை மாற்றும் சக்தியோடு இருப்பதோ, ஒரு இனக் குழு மற்றொன்றின் மீது ஆதிக்கம் செலுத்துவதோ மட்டும்தான் என்றில்லை. ‘சாதாரண மனிதர்களான’ நாம், நம் அன்றாட வாழ்க்கையில், நம்மையறியாமலேயே சக மனிதர் மீது அதிகாரம் செலுத்துபவராக இருக்கிறோம். பிள்ளைகளின் நன்மைக்காக என்று சொல்லி, படிப்பு முதல் திருமணம் வரை தங்களின் ஆசைகளை தங்கள் குழந்தைகள் மீது திணிக்கும் பெற்றோர், மனைவியின் உடை, பேச்சு, வேலைக்கு செல்லும் அவள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் கணவன், தன் உயரதிகாரியின் அதிகாரத்திற்கு கூழை கும்பிடு போட்டு, அந்தக் கோபத்தை தனக்கு கீழ் வேலை செய்பவர்கள் மீது காட்டுபவர் என அதிகாரம் எல்லா உறவுகளிலும் பரவி உள்ளது. (more…)
