எழுத்துக்கலை

சொல்ல வந்த விஷயத்தைச் சரியாகச் சொல்லும் கலை – ‘The Sense of Style: The Thinking Person’s Guide to Writing in the 21st Century- Steven Pinker’.

இது நூல் மதிப்பீடோ, நூல் அறிமுகமோ விமரிசனமோ அல்ல. மேற்கண்ட புத்தகத்தில் பல விஷயங்கள் பேசப்பட்டிருக்கின்றன என்றாலும் எழுத வந்த விஷயத்தைப் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் பதிவு செய்வது எப்படி என்பது பற்றி சில குறிப்புகளைப் பதிவு செய்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

ஸ்டீவன் பிங்கர் எழுதிய, “The Sense of Style: The Thinking Person’s Guide to Writing in the 21st Century” என்ற புத்தகம் அண்மையில் வெளிவந்திருக்கிறது. இது பற்றி இணையமெங்கும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். Cognitive Scientist, Linguist என்றெல்லாம் அறியப்படுவதாலும் பொதுவாசகர்கள் படிக்கும் வகையில் அறிவியல் புத்தகங்களை எழுதுவதில் வெற்றி பெற்றவர் என்பதாலும் பிங்கர் சொல்லிக் கொடுக்கும் பாடங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. (more…)

“நாவலில் காலம் ஒரு பாத்திரம்” – லோரி மோர் நேர்முகத்தின் சில பகுதிகள்

Anagrams, Who Will Run the Frog Hospital?, A Gate at the Stairs என்று மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார் லோரி மோர். இவரது சிறுகதைகள் Self Help, Like Life, Birds of America, Bark என்று நான்கு தொகுப்புகளாக வெளியிடப்பட்டிருகின்றன. இவை தவிர புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி பற்றி ந்யூ யார்க் ரிவ்யூ ஆஃப் புக்ஸில் இவர் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார். தற்போது நாஷ்வில்லில் உள்ள வான்டர்பில்ட் யுனிவர்ஸிட்டியில் புனைவெழுத்துக் கலை கற்பிக்கிறார்.

யுவர் ஹிட்டன் செல்ஃப் என்ற தளத்தில் பதிப்பிக்கப்பட்ட நேர்முகத்தின் சில பகுதிகள் இங்கு தமிழாக்கம் செய்து அளிக்கப்படுகின்றன. நேர்முகம் கண்டவர் – டீர்ட்ரி

நீங்கள் இந்தக் கதைகளை எழுதுவதற்கான உந்துதல் என்ன?

எனக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. உண்மையில் இது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி வந்தன. நபகோவ் கதையைப் பொருத்தவரை, மீண்டும் “Signs and Symbols” வாசித்தேன். ஆசிரியையாக ஒவ்வொரு மறுவருடமும் நான் அதைப் படித்துக் கொண்டிருக்கிறேன் போலிருக்கிறது. இப்போது திடீரென்று நான் அதில் வெவ்வேறு பல விஷயங்களை கவனித்தேன். அதைத் தொடர்ந்து என் மனதில் ஒரு கதை நிழலாடத் துவங்கிற்று. ரே கார்வார் கதைக்கு நாதன் இங்க்லாண்டர் இதைச் செய்தது எனக்கு உந்துதல் அளித்திருக்கலாம். கார்வர் கதைக்கு நெருக்கமான நிழலாக இல்லாத ஒரு கதையை அவர் எழுதினார். நான் எந்தக் கதையைச் சொல்கிறேன் என்று தெரிகிறதா? (more…)