கவியின்கண்

கவியின் கண் – அன்னிய வானின் கீழல்ல

எஸ். சுரேஷ்

அன்னிய வானின் கீழல்ல
அன்னிய சிறகுகளின் நிழலில்ல-
இவையனைத்தையும் என் மக்களுடன் பகிர்ந்து கொண்டேன்
இங்கே, தீவினை எம்மைக் கைவிட்ட இடத்தில்
– அன்னா அக்மதோவா

சில நாட்களுக்கு முன்னர் நாம் சுதந்திர தினத்தைக் கொண்டாடினோம். அப்போது ஊடக கட்டுரைகளிலும் சமூக ஊடகச் சிற்றுரைகளிலும் இருவேறு தீவிர குரல்களைக் கேட்க முடிந்தது. ஒரு முனையில், தேசபக்திக் கட்டுரைகள்- நாம் ஏன் உலகின் தலைசிறந்த நாடாக விளங்குகிறோம் என்று. மறுமுனையில், நம்பிக்கையற்றவர்கள்- நமக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதா என்ற சந்தேகத்துடன், நம் சமூகத்தில் உள்ள தீமைகள் அனைத்தையும் பட்டியலிட்டு இவையே இந்தியாவின் சாதனைகள் என்ற குற்றச்சாட்டு (வழக்கம் போலவே உண்மை இவை இரண்டுக்கும் நடுவில் எங்கோ இருக்கிறது).

ஒரு வகையில் நாம் அதிர்ஷ்டக்காரர்கள் – நம் எதிரி யார் என்பதை நாம் அறிந்திருந்தோம். நம்மை ஆக்கிரமித்திருந்தவர்கள் பிரிட்டிஷார், அவர்களை விரட்டிவிட்டால் சுதந்திரம் கிடைத்துவிடும் என்று நம்பினோம். ஆனால் இதற்கு மாறாக, உலகின் பல நாடுகளும் வேற்று எதிரியை அடையாளம் காண முடியாத காரணத்தால் அடிமைத்தளையில் அவதிப்பட்டன. அவர்களின் எதிரி உள்ளிருந்தான். சர்வாதிகாரி, கொடுங்கோலன், பாசிஸ்டு என்று எப்படி அழைத்தாலும் அவன் அந்நாட்டு குடிமக்களில் மக்களில் ஒருவன். இவர்களில் பலர் மக்களின் ஒருமித்த ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றியவர்கள். இது போன்ற ஓர் அதிகார அமைப்புடன் கடுமையாகப் போராடினாலன்றி விடுதலை பெறுதல் அரிது.. (more…)

கவியின் கண் 17 – சாவின் நூற்பு நார்கள்

– எஸ். சுரேஷ் –

சிறிய சதுக்கம்

என் வாழ்க்கை ஒரு சிறு சதுக்கத்தின் வடிவம் பெற்றுவிட்டது
உன் மரணத்துக்கான ஏற்பாடுகள் கவனமாகச் செய்யப்படும் அந்த இலையுதிர்காலம்
நீ நேசித்ததால் நான் அந்தச் சதுக்கத்தைப் பற்றிக் கொண்டிருந்தேன்
சிறிய கடைகளின் அலங்காரமற்ற, பழைய நினைவுகளில் ஆழ்த்தும் மானுடம்
ரிப்பன்களையும் துணிகளையும் மடித்துப் பிரிக்கும் அதன் கடைக்காரர்கள்
நான் நீயாக நினைத்தேன், நீ சாகப் போகிறாய் என்பதால்
அங்கிருந்த என் வாழ்வெல்லாம் எனக்குரியதல்லாது போகும் என்பதால்
நீ சிரிப்பது போல் நான் சிரிக்க முயற்சித்தேன்
செய்தித்தாள் விற்பவனிடமும் சிகரெட் விற்பவனிடமும்
வயலெட்கள் விற்றுக் கொண்டிருக்கும் அந்தக் கால்களற்ற பெண்ணிடமும்
காலற்றவளிடம் உனக்காகப் பிரார்த்திக்கச் சொன்னேன்
அந்தச் சதுக்கத்தின் மூலையில் இருக்கும் சர்ச்சுகளின்
பீடங்கள் அனைத்திலும் மெழுகுவர்த்திகள் ஏற்றினேன்
என் கண்களைத் திறந்ததும் கண்டேன், வாசித்தேன்
உன் முகத்தில் நித்தியத்தின் சேவகம் எழுதப்பட்டிருப்பதை
தெருக்களை அழைத்தேன், இடங்களை, மனிதர்களை,
உன் முகத்தின் சாட்சிகளாக இருந்தவர்கள் அனைவரையும்
உன்னை அழைப்பார்கள் என்று, உன்னை அவிழ்ப்பார்கள் என்று
உன்னைச் சுற்றி சாவு நூற்றுக் கொண்டிருந்த நார்களையும் என்று

சோபியா டி மெல்லோ பிரெய்னர் அன்ட்ரீசன்
போர்ச்சுகீசிய மொழி கவிதையின் ஆங்கில மொழியாக்கம் , ரூத் ஃபெய்ன்லைட் (1994) (more…)

கவியின்கண் 16 – குறைகளற்ற மலர்

எஸ். சுரேஷ்

ஒற்றை மலரை எனக்கு அளித்தான், நாங்கள் சந்தித்தபின்.
மென்மையான ஒரு தூதுவனை அவன் தேர்ந்தெடுத்தான்;
ஆழ் இதயம், தூய்மை, ஈரம் காயாத பனித்துளியின் நறுமணம்-
குறைகளற்ற ஒற்றை ரோஜா.

மலர்களின் மொழியை நான் அறிவேன்;
“மெல்லிய என் இதழ்களில் போதிந்திருக்கும், அவன் இதயம்”
எப்போதோ காதல் தனக்கென தேர்ந்தெடுத்துக் கொண்ட சின்னம்
குறைகளற்ற ஒற்றை ரோஜா.

இதுவரை ஏன் ஒருவரும் எனக்கு
குறைகளற்ற ஒரு லிமோ அனுப்பியதில்லை|
இல்லை, என் அதிர்ஷ்டம் எப்போதும் எனக்குக் கிடைப்பது,
குறைகளற்ற ஒற்றை ரோஜா

– டார்தி பார்க்கர் (more…)

கவியின்கண் 15 – இறுதி கோஷம்

– எஸ். சுரேஷ் –

The last war slogan

“கின்ஸ்பர்க்”
– ஜூலியோ வைனோகிராட்

குற்றம் சொல்வதற்கில்லை. ஹௌலும் கட்டிஷும் எழுதிய எவரும்
மிச்சமிருக்கும் தங்கள் வாழ்நாளெல்லாம்,
எத்தகைய தவறும் செய்யும் உரிமை ஈட்டியவர்கள்.
என் குறை, இந்தத் தவற்றை அவரோடு நான் செய்திருக்க வேண்டாம் என்பதுதான்.
இது நடந்தது வியட்நாம் போரின்போது
அவர் ஒரு மாபெரும் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார், வாசித்தபடி
வாஷிங்டன் ஸ்கொயர் பார்க்கில் இருந்தார்,
அங்கிருந்து செல்ல யாருக்கும் விருப்பமில்லை, (more…)

கவியின் கண் 14 – நீல நெருப்பு கண்கள்…

 எஸ். சுரேஷ் –

முதலில் நம்மை உருவாக்கிய இந்த பேராசையிடமிருந்து
நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும்
அதுதான் என்னை இந்த பாரின்
ஒரு மூலையில் உட்கார்ந்து,
பாதிரியின் பேரவாவுடன் காத்திருக்க வைத்திருக்கிறது,
குறிப்பிட்ட அந்த தருணத்திற்காக-
எதிரில் நீல நெருப்பு கொண்ட கண்கள்,
அபாயத்திற்கு பழக்கப்பட்ட அந்த கண்கள்,
முன்கணிக்கப்பட்ட பாதையில்,
என் கன்னங்களின் வெட்கச் சிரிப்பை கோரும்,
அவை கோரிய நாணமும் அவற்றுக்கு கிட்டும்.

– பாட்ரிசியா கவல்லி (more…)