
போரில் தோற்ற சடலங்கள்
கடலில் தூக்கியெறியப்பட்டன.
சலனமற்ற நீர் எதையும் கழுவுவதில்லை.
கடலடியில் ஆவிகள் இன்னமும் அமைதியின்றி அலைகின்றன.
கடலலைகளின் இடைவெளியில் கேட்க முடிகிறது
அந்த ஆவிகளின் குரலை –
‘எங்களை நதியில் எறியுங்கள்
ஓடும் நதி மட்டுமே கழுவியபடி இருக்கும்
எங்கள் வாளின் ரத்தத்தையும்
எங்களை விலகா அவமானத்தையும்’.
நன்றி – kiku.com