காத்திருக்கும் கவிதை

எஸ். சுரேஷ்

cat
எதுகையும் மோனையும் கச்சிதமாய் அமர
தங்குதடையின்றி வார்த்தைகள் பிரள
அகத்தின் ஆழத்தை வாக்கியங்கள் தொட
மனிதனுக்கு புதுவழி காட்ட
ஒரு கவிதை என்னுள் தோன்றியது

மனதில் இருந்த கவிதை மறைவதற்கு முன்
கணினியில் பதித்துவிட விரைந்தேன்

என் லெனோவோ திங்க்பாட் மேல் தூங்கிக்கொண்டிருந்த
பூனை எழுந்து என்னைப் பார்த்து முறைத்தது

பூனைக்கு பால் எடுக்க நான் சமையலறை சென்றேன்

 

image credit – Literary Cats

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.