சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த யானைக்குட்டி
திடீர் என்று ஒரு வீட்டின் காலிங் பெல்லை அழுத்திவிட்டு
தனக்கு எதுவும் தெரியாதது போல் நடையைக் கட்டியது
கதவைத் திறந்து பார்த்த சிறுமி, ‘அம்மா, யானை, யானை!’
என்று கத்த, குட்டி யானை அவளைத் திரும்பிப் பார்த்தது.
‘யான பாக்கறது, யான பாக்கறது,’ என்று இன்னும் அதிகமாகக்
கத்தினாள். சிறுமியைப் பார்த்துக் கொண்டே குட்டி யானை
அடுத்த வீட்டு காலிங் பெல்லை அழுத்தியது.
கவிஞர் குறிப்பு-
ஒளிப்பட உதவி- Galleryhip

One comment