உறங்கலாம் என்று படுத்தபோது
“தொப் தொப் தொப் தொப் ” என்று
மாடி போர்ஷனில் யாரோ குதிக்கும் சப்தம் கேட்டது
தூங்க முடியாமல் மேல் போர்ஷனுக்கு போன் செய்தேன்
“ஹலோ” என்றது போனை எடுத்த நெருப்புக்கோழி,
“சாரி, நாங்க கொஞ்சம் அதிகமாக குதித்துவிட்டோம்.
இனி அப்படி குதிக்கமாட்டோம்,”
என்று சொல்லிவிட்டு போனை வைத்தது.
இப்பொழுது “தொப் தொப் தொப்” என்ற சப்தம்
மெதுவாக சப்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது