
வண்ணக்கழுத்து 6: காணாமல் போன வண்ணக்கழுத்து
நாங்கள் திரும்பி வந்த அடுத்த நாளே வண்ணக்கழுத்து மீண்டும் பறந்து போய்விட்டான். காலையில் போனவன்தான், பிறகு அவனைக் காணவேயில்லை. தொடர்ந்து நான்கு நாட்கள் பதற்றத்துடன் அவனுக்காக நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம். பிறகு, வருவான மாட்டானா என்ற சந்தேகம் தாளாமல் நானும் கோண்டுவும், அவனைத் தேடி உயிருடனோ பிணமாகவோ கண்டுபிடித்துவிடுவது என்ற முடிவோடு புறப்பட்டோம். இந்த முறை எங்களை சிக்கிம் வரை ஏற்றிச் செல்ல, இரண்டு குதிரைகளை அமர்த்திக் கொண்டோம். நாங்கள் கடந்து சென்ற ஒவ்வொரு கிராமத்திலிருந்த மக்களிடமும் வண்ணக்கழுத்தைப் பற்றிக் கேட்டு, அவனுடைய பாதையை உறுதி செய்து கொண்டோம். பெரும்பாலானவர்கள் அவனைப் பார்த்திருந்தார்கள். அவர்களில் சிலர் அவனுடைய தோற்றத்தை கச்சிதமாக விவரித்தார்கள். ஒரு வேடன் அவனை பெளத்த மடத்தின் கூரைக்குக் கீழ் இருந்த கூட்டில் ஒரு உழவாரக் குருவிக்குப் பக்கத்தில் பார்த்திருக்கிறார். ஒரு பெளத்த துறவி, சிக்கிமில் காட்டு வாத்துகளின் கூடுகள் கொண்ட நதிக்கரையில் இருக்கும் அவர்களுடைய மடாலயத்திற்குப் பக்கத்தில் அவனை பார்த்ததாகச் சொன்னார். மேலும், சமீபமாக இரண்டாம் நாள் மதியும் நாங்கள் கடந்த வந்த கிராமத்தில், அவனை உழவாரக் குருவிகளின் கூட்டத்தோடு பார்த்ததாகச் சொன்னார்கள்.
இதுமாதிரியான நல்ல செய்திகள் வழிநடத்த நாங்கள் சிக்கிமின் உயர்ந்த சமநிலத்தை அடைந்தோம். அங்கு மூன்றாம் நாள் இரவு கூடாரம் போட்டுக் கொள்ள வேண்டியதாயிற்று. எங்கள் குதிரைகள் தூக்கக் கலக்கத்தில் இருந்தன. நாங்களும் தான். ஆனால், ஒரு மணிநேரத் தூக்கம் போல் இருந்தற்குப் பிறகு, எல்லாவற்றின் மீதும் படிந்திருந்த ஒருவிதமான பதற்றத்தினால் நான் விழித்துக் கொண்டேன். பொதி சுமக்கும் இரண்டு மிருகங்களும் விரைத்துக் கொண்டு நிற்பதைக் கண்டேன். நெருப்பின் ஒளியிலும், உயர்ந்திருந்த பாதி அரைநிலவின் ஒளியிலும், அவற்றின் காதுகள், கவனமாகக் கேட்கும் நோக்கத்தில் விரைத்துக் கொண்டு நின்றன. அவற்றின் வால்கள் கூட அசையவில்லை. நானும் கூர்ந்து கேட்டேன். அந்த இரவின் அமைதி வெறும் சத்தமின்மை மட்டுமல்ல. அது அதையும் தாண்டியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அமைதி என்பது வெறுமையானது. ஆனால், எங்கள் முன்னால் இருந்த அந்த அமைதியானது முழுக்க முழுக்க அர்த்தம் கொண்டிருந்தது. நிலாவொளியை அணிந்து வரும் ஒரு கடவுள், நான் கைநீட்டினால் அவரது ஆடையைத் தொட்டுவிடும் தூரத்தில் அளவு நெருக்கத்தில் வருவது போல அந்த அமைதி இருந்தது.
உடனே குதிரைகள், அப்போது நிசப்தத்தின் ஊடே மெதுவாகக் யாருக்கும் தெரியாமல் கடந்து சென்ற ஒரு சத்தத்தின் எதிரொலியைப் பிடிப்பதற்காக தங்கள் காதுகளைத் தீட்டிக் கொண்டன. பெரும் தெய்வம் கடந்து சென்றிருக்க வேண்டும். இப்போது, பதற்றமான சூழல் கரைந்து ஒரு அறிமுகமில்லாத அறிமுகமற்ற ஒரு சூழல் உருவானது. புற்களின் நுண் அசைவுகளைக் கூட உணர முடிந்தது. அதுவும் கூட தற்காலிகமானது கணப்பொழுதுதான். குதிரைகள் இப்போது வடக்கிலிருந்து எழும் புதிய சத்தத்தைக் கேட்டன. தங்கள் முயற்சியில் ஒவ்வொரு நரம்பையும் சிரமப்படுத்திக் இறுக்கிக் கொண்டு செவிகூர்ந்தனகொண்டன. கடைசியில் என்னாலும் அதைக் கேட்க முடிந்தது. ஒரு குழந்தை தூக்கத்தில் கொட்டாவி விடுவதைப் போல ஒரு சத்தம். மீண்டும் நிசப்தம் வந்தது. பிறகு ஒரு பெருமூச்சு, ஆழமாக இழுத்து விடப்பட்டது, ஒரு கெட்டியான பச்சை இலை சலனமில்லாத தண்ணீரில் மெதுவாக மூழ்குவது போல, காற்றோடு ஓடி கீழே இன்னும் கீழே அமிழ்ந்தது. பிறகு வானத்தை நோக்கி யாரோ பிரார்த்தனை செய்வதைப் போல, அடிவானத்தில் ஒரு முணுமுணுப்பு எழுந்தது. ஒரு நிமிடம் கழித்து, குதிரைகள் தங்கள் காதுகளை தளர்த்திக் கொண்டு, வால்களையும் ஆட்டின. நானும் இலகுவாக உணர்ந்தேன். ஓ! ஆயிரக்கணக்கான கீஸ் வாத்துகள் மேற்காற்றில் பறந்தன. எங்களிடமிருந்து சுமார் நாலாயிரம் அடி உயரத்தில் அவை பறந்தன. ஆனால், நான் அறிந்து கொள்வதற்கு வெகு முன்னரே, குதிரைகள் அவற்றின் வருகையைக் கேட்டுவிட்டன.
கீஸ் வாத்துகளின் வருகை, சீக்கிரமே விடியப் போவதை உணர்த்தின. நான் எழுந்து உட்கார்ந்து கொண்டு பார்த்தேன். நட்சத்திரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அஸ்தமித்தன. குதிரைகள் மேயத் துவங்கின. இரவு கடந்துவிட்டபடியால் அவற்றை நெருப்புக்குப் பக்கத்தில் கட்டி வைக்க வேண்டிய தேவை இல்லை. அவற்றின் கயிறுகளைத் தளர்த்தி விட்டேன்.
அடுத்த பத்து நிமிடங்களில், விடியலில் ஆழ்ந்த நிசப்தம் எல்லாவற்றையும் தன்னுடைய பிடியில் வைத்திருந்தது. எங்கள் இரண்டு குதிரைகளிடமும் அதன் தாக்கம் இருந்தது. இந்த முறை, அவை இரண்டும் தங்கள் தலையை உயர்த்தி கேட்பதை தெளிவாகக் காண முடிந்தது. என்ன சத்தத்தை அவை கேட்க முயல்கின்றன? நான் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கவில்லை. பக்கத்தில் ஒரு மரத்தில் ஒரு பறவை தன்னை உலுக்கிக் கொண்டது. பிறகு மற்றொரு கிளையிலிருந்து மற்றொரு பறவை. அவற்றில் ஒன்று பாடியது. அதுவொரு பாட்டுக் குருவி. அதன் சத்தம் மொத்த இயற்கையையும் எழுப்பியது. மற்ற சிட்டுக் குருவிகளும் கிரீச்சிட்டன. பிறகு மற்ற பறவைகள். அதற்குப் பிறகு மேலும் பல பறவைகள் கிரீச்சிட்டன. இப்போது குருடாக்கிவிடும் வேகத்தில், வடிவங்களும் வண்ணங்களும் வெளிச்சத்திற்கு வந்தன. வெப்பமண்டலத்தின் விடியல் இப்படியே வேகமாகக் கழிந்தது. கோண்ட் தன்னுடைய பிரார்த்தனைகளைச் செய்ய பிரார்த்திக்க எழுந்தார்.
அன்று எங்கள் அலைச்சல், எங்களை சிங்காலியாவிற்குப் பக்கத்திலிருந்த ஒரு மடாலயத்திற்கு கொண்டு சேர்த்த்து. இந்த மடாலயம் பற்றி நான் முன்னரே சொல்லியிருக்கிறேன். வண்ணக்கழுத்தைப் பற்றிய அனைத்து செய்திகளையும் அந்த லாமாக்கள் மகிழ்ச்சியோடு எங்களிடம் பகிர்ந்து கொண்டார்கள். அதற்கு முந்தைய நாள் மதியம், மடாலயத்தின் கூரைக்குக் கீழ் தங்கியிருந்த வண்ணக்கழுத்தும் உழவாரக் குருவிக் கூட்டமும் தெற்கு நோக்கிப் பறந்து போனதாகத் தெரிவித்தார்கள்.
மீண்டும் லாமாக்களின் ஆசீர்வாதங்களோடு, அவர்களுடைய சிறந்த விரும்தோம்பல் கொண்ட சத்திரத்திற்கு விடை கொடுத்துவிட்டு வண்ணக்கழுத்தைத் தேடிப் புறப்பட்டோம். கடைசியாகத் திரும்பிப் பார்க்கும் போது, மலைகள் தீப்பந்தங்கள் போல் எங்களுக்குப் பின்னால் எரிந்து கொண்டிருந்தன. இலையுதிர்காலம் பற்றிக் கொண்டத்தின் சாயம் வண்ணங்களில் மரங்கள் மிளிர்ந்தன. பொன், ஊதா, பச்சை, குங்குமச்சிவப்பு நிறங்கள் எங்களுக்கு முன்னால் இருந்தன.