கண்ணாடியில் எல்லாம் பளிச்சென்று தெரிகின்றன-
வயல்வெளி, ஓடை, மாடுகள்
உண்மையுலகை விட்டு நம்மை விலக்கி வைக்கிறது கண்ணாடி
தூரத்தில் கால் தடுக்கி விழும் குழந்தை
அதன் அழுகையை காண முடிகிறது
ஆனால் குரல் என்னை வந்தடைவதில்லை
குரல் இல்லா நினைவுகளைக் காண்கிறேன்
பல வருடக் காட்சிகள் வந்து மறைய
ஒளி பட்டு புண் ஆறிவிட்டிருக்கிறது
மறைந்த காலத்தை கண்ணாடியில்தான் பார்க்க முடியும்
என் விருப்பத்துக்குக் காலமும் வெளியும் விரிகின்றன
கண்ணாடியில்
இரவு நெருங்க
என் முன்னுள்ள உலகம் மெல்ல மறைகிறது
௦௦௦
ஒளிப்பட உதவி – devorahsperber.com