மக்கள் கூடுமிடம் – மொழிபெயர்ப்பு பற்றிய ஒரு குறிப்பு

நான் உண்மையில் ஓரளவு ஞாபகம் இருந்த தேவதச்சனின் ஒரு கவிதையை மொழிபெயர்க்க விரும்பி, அதை எடுத்துப் பார்த்தபோது அதில் குறிப்பாக அதன் கடைசி வரிகளை எப்படி ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது என்று தெரியாமல் இருந்தது. சரி, வேறு ஏதாவது எளிமையாக இருக்கிறதா என்று சில புத்தகங்களைப் புரட்டியபோதுதான் அமலன் ஸ்டேன்லியின் மக்கள் கூடுமிடம் என்று துவங்கும் கவிதையும் இன்னொன்றும் அகப்பட்டன.

அந்த தேவதச்சன் கவிதை-

இம்
மேஜை டிராயரில்
கடல்,
கட்டிலுக்கடியில் விண்பருந்து
விளக்கு ஒயரில்
உலவும் புலி,
கண்ணாடி டம்ளரில் ஓடாது
வெளியே பார்த்துக்கொண்டிருக்கும் ஜலம்
கம்பிகளில்லா
சிறைச்சாலை உலகம்
சிறைகளற்ற சுவர்கள்
இவ்வறை

One comment

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.