தாவரத் தன்மை மானுடத்திற்கு வாய்த்து விட்டால் எப்படியிருக்கும்…

‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்’ வாடியவனும், ‘வெள்ளத்தனைய மலர் நீட்டம்’ என்று சொன்னவனும் பிற உயிர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவே சொன்னார்கள்.

மரங்கள் தன் சுயம் இழப்பதில்லை; பொறாமையில் போட்டியிடுவதில்லை; தம்மளவிலான நிறைவும், நிறைவின் பெருமிதமற்ற வெளிப்பாடும் நிறைந்தவை. நீர் தேடி வேரனுப்பும் சாகசமும் மண்ணுக்கடியே. மானுடம் கற்றுக்கொள்ள குரலின்றி அநேகம் உரைப்பவை.

ஆறறிவில் குறைந்தவை இவ்வளவு ஆழமான பொருள் பொதிந்து நிற்கையில், ஆறறிவு கைகூடிய மானுடம் என்னவெல்லாம் சாதிக்கக்கூடும்? எத்தனை அணுக்கமான உறவு இப்புவியுடனும் சக மனிதருடனும், பிற உயிர்களுடனும் பேண இயலும்?

புலனடக்கத்தோடு, தீமைகளையும் துரோகங்களையும் செரித்து, நன்மை ஈயக்கூடிய ஒரு தாவரத் தன்மை மானுடத்திற்கு வாய்த்து விட்டால் எப்படியிருக்கும்…

One comment

  1. இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

    சித்திரையாள் வருகை
    இத்தரையில் எல்லோரும்
    எல்லாமும் பெற்று வாழ
    எல்லோருக்கும் வழிகிட்டுமென
    புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிரும்
    இத்தால் உங்கள் யாழ்பாவாணன்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.