நிறப்பிரிகை: நான்கு – துய்யம்

சரவணன் அபி

இறையின் முன்
கரைந்தொழுகும் கண்ணீர்

இரவும் விடியலும்
இல்லாதோரின்
எதிர்நோக்கல்
எளிமையின் திறப்பு
சாதனையின் உச்சம்

எதுவும் அறியாத
எதுவும் நிறையாத
எதுவாகவும் இல்லாத
எதுவாகவும் உருமாறும்
உன்னதம்
துய்யம்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.