
ஒற்றைக்காலில்
தவம் செய்யும்
மல்லார்ட் வாத்து
பித்தளை மூக்கை தூக்கி
காற்றில் வாசம் பிடிக்கிறது.
துலங்கும் வெளிச்சத்தில்
மின்னும் மரகதக் கழுத்தை
சுற்றிச்சுற்றி வந்து
படம்பிடித்து தள்ளுகிறவர்களை
அரைக்கண் சரித்துப் பார்க்கிறது
கேமிராவும் ஃபேஸ்புக்கும்
கண்டுபிடிக்கப்படாத காலமொன்றில்,
எள்ளுப்பிண்ணாக்கையும், மக்காசோளத்தையும்
உருண்டை பிரட்டி
உலர்ந்த மீன்களை
கொண்டு வந்திருப்பார்களாக இருக்கும்.
வண்ணமயமான இறக்கைகளுடனான
உடலைக் கொஞ்ச நேரம்
அவர்களுக்குக் காட்டிவிட்டு
ஏரிக்குள் மறைகிறது.