வழுவழுப்பான சிறிய கூழாங்கல்லால் இடறப்பட்டோ
வன்மத்துடன் பாய்ச்சப்பட்ட கோடரியாலோ
வெறுமையான வயோதிக நொடிகளுக்குள்
புதைந்து போயோ
இலைச்சருகென இயல்பாக உதிர்ந்தபடியோ
மனக் கொந்தளிப்போடு மலையுச்சியிலிருந்து குதித்தோ
உற்றார் எல்லோரும் கொண்டாடும்
பொலிவான வாழ்க்கை முடித்து
வரலாற்று நாயகராகவாகவோ
துப்பாக்கிகுண்டின் விரைவிற்கு
தோற்றுப் போனவர்களாகவோ
எப்படியோ இங்கு ஒரு
வாழ்க்கை முடிந்து போகிறது..
ஆறுதல் முகங்களை
காட்டிச்செல்ல விரும்புபவர்களிடையே
ஒரு கணக்கு ஓடுகிறது,
எரியும் சிதையிலிருந்து
எத்தனைக் கொள்ளிகளை
பிடுங்கிக் கொண்டுப் போய்
தங்கள் வழிகளை ஒளியேற்றுவதென,
உயிருற்று இருப்பதுதான்
எவ்வளவு துயரமானது.
Picture courtesy: Videoblocks.com
