எந்த இடத்தில் பிரிந்தோமோ
அந்த இடத்தில் சேர்வோம்
பாதைதோறும் நினைவுகள் குடை விரித்தன
உங்கள் முகத்தில்
நான் ஒரு களங்கமற்ற சிரிப்பையும்
உங்கள் இதயங்களில்
ஒரு நல்லெண்ணத்தையுமே வேண்டுகிறேன்
நம் பிரிவு நிகழ்ந்த இடங்களை
நம் சேரிடங்களாக்கி
களங்கமற்ற ஒரு புன்னைகையை நடுவோம்
நெஞ்சையுறுத்தும் நினைவு முட்களை
உயிர்ப்பற்ற குருட்டு நம்பிக்கைகளை
ஒரு யுகப் பின்னடைவை
இப்போது நமது சொற்கள் தாண்டிவிட்டன
துயர் படிந்த ஒரு காலமும்
அதன் குரூரக் காயங்களும்
ஒரு பயணத்தில் கடந்து விடக்கூடியவையே.
One comment