கூர்சுடர் கீற்றென
பல்லவி முடிந்து
கார்வையில் நிற்கும் ரீங்காரம்.
குறுகிய கட்டையின் மீதேறி
விரித்த கைகளுடன்
கால்நுனியில் ஒரு மென்நடை.
புருவமுயர்த்தி முன்னிற்பவர்
ஐயம் தீர்ந்து நம்பிக்கை கொள்ள
வசியம் தொடங்கிய சொல்லாடல்.
வண்ணத் தெறிப்புகளில்
கண்சிமிட்டி முளைத்தெழும்
புத்துருச் சித்திரிப்பு.
கடற்கரை மணலை
குழைத்து எழுப்பும்
சிறு கோபுரம்.
இனிமையாக ஆரம்பிக்கிறது
இக்கணத்தின் நிலையுறுதி.
எதிர்நோக்கும் தருணங்களின்
அநிச்சயத்தால் கிளர்ச்சியுற்று
ஆற்றுகையின் அடுத்த படியென
அலையும் கடல் நீர்ப்பரப்பின்மீது
கால் பதிக்கிறேன்.
One comment