அத்தனை நொடிகளுக்கு
நிலைகுத்தியது போலிருந்த
பார்வையின் நேசம்
அப்போது புரியாமலிருந்திருக்கலாம்.
பொருள் புரிந்தபோது
எடுத்து சொல்வதெப்படி எனத்
தெரியாது மலைத்திருந்திருக்கலாம்.
அப்போதே பதிலிறுத்து
பருவத்தே செய்த பயிரென
இன்னுறவை இன்பமாய்
பேணியிருந்திருக்கலாம்.
கலப்பில்லா அன்பென
வீசிவிட்டு சென்ற வெம்மையை
நினைத்திடும் கணமெல்லாம்
உணரமுடியாமல்
இப்போது
தணிந்து உலர்ந்தும்
போயிருந்திருக்கலாம்