எஸ்.வீ.ராஜன்
பூ மேகம் தூறிவிட்டுப் போகட்டுமென்று
புரண்டு படுக்கும் காய்ந்த சருகிற்கு
தொட்டி நிரம்பி வழிநீர் பட்டுத் தெறிக்கிறது
என்று சந்தோஷப்பட இடமில்லை.
ஊர்சுற்றிக் காகமும் கும்மாளக் குருவியும்
குற்றாலக் குளியல் போட்டு
சிலிர்த்துச் சிறகசைத்துக் கூடடையும்
மாலைச் சூரிய சாய்வொளி
வானவில் வரைந்து காட்டும்.
மின்னியக்கியை கீழிறக்கிட
ஊளையை நிறுத்தும்
ஆழ்துளைக் கிணற்று நீரேற்றி.
.