நீள்வரிசையில் நிரப்பி வைத்திருக்கும்
காப்பிக் கோப்பைகளிலிருந்து
ஒன்றை எடுத்து நீட்டுகிறாள்,
கருநீலச் சாயமிட்ட நகங்களுடையவள்.
சதுர சாளரத்தின் வழியே
மின்னி மறையும் முகங்களுக்கு
நன்றியுடனான சிரிப்பை
நகலெடுத்து தருகிறார்.
நகப்பூச்சுக்காரிக்குத் தெரியாது,
நாடக நன்றியில் ஒன்றை
எனக்கானது என நான்
எடுத்து வைத்துக் கொள்வது.