இரு ஏரிகள்

ரா கிரிதரன்

(This is an unauthorised translation of the poem, ‘Two Lakes,’ originally written in English by Arvind Krishna Mehrotra. The Tamil translation is intended for educational, non-commercial reproduction at this particular website only)

பூகோள நிகழ்வுகள்
மட்டுமல்ல ஏரிகள்.
பொம்மை உயிர்காட்சியகம் மற்றும்
பொய்யான ஜப்பானிய தோட்டத்தோடு
நிறைந்த ஏரி ஒன்று எனக்குத் தெரியும்.
ஒரு சிகப்பு சாலை சுற்றியிருக்க அது முழுவதுமாகப் பொய்த்தோற்றம். அதன் பிம்பங்களில்
தனித்த வண்டிகள், வாசமான எஞ்சின்கள் மற்றும் ஒரு பெரிய
எஃகு பட்டறை.

ரெண்டாவது ஏரி
மலையடிவாரத்தில் மாசற்று
இருக்கிறது;
இல்லாதது போல். ஒரு பக்கம்
விடுதியில் இறந்த இங்கிலாந்துக்காரர்கள்
புலிகள் மீது அமர்ந்து சீட்டாடுகிறார்கள்.
மீசை முகத்தினூடாக தூசித்துகள்கள் மிதக்கின்றன.
பில்லியர்ட் அறையில் மேஜை சீர்குலையாமல் இருக்கையில்,
ரத்தம் உறைந்த சமையலறை கத்தி
அப்பகுதியின் நாட்டார் கதையில்
பத்திரமாகத் தோன்றியிருக்கிறது.

oOo

(1970களின் நவீன ஆங்கில இந்திய கவிதை உலகத்தில் மிகப் பிரபலமானப் பெயர் அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா. அருண் கொலாட்கர், ஏ.கே.ராமானுஜம், போன்றவர்களுடன் அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா ஒரு கவிதை இயக்கமாகச் செயல்பட்டார். அவரது ஆங்கில கவிதைகளும், பிராகிரத மொழியாக்கங்களும், கபீரின் கவிதை ஆக்கங்களும் உலகளாவிய கவனத்தைப் பெற்றுத்தந்தது. பம்பாயின் நவீன சிறு பத்திரிக்கை உலகின் அடையாளமாகக் காணப்பட்டவர் அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா. damn you எனும் சிறு பத்திரிகையைத் தொடங்கி பல இளம் கவிஞர்களை ஆங்கில கவிதைக்கு ஆற்றுப்படுத்தியிருக்கிறார். Middle Earth, Nine Enclosures போன்ற தொகுப்புகளும் History of Indian Literature, The Oxford India anthology of twelve modern Indian Poets போன்ற விமர்சக நூல்களும் எழுதியவர்.

அவரது கவிதைகளின் மொழியாக்கங்களை இத்தொடரில் பார்க்கலாம்.)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.