சி ஹெச் சிசொன் (அபிநந்தன்)
இந்தக் குழந்தை என்று நான் சொல்வதில்லை
தன் பெருத்த உடலில்
சாம்பல் சேறு பூசிய இந்தக் குழந்தை
இந்தக் குழந்தை என்று நான் சொல்வதில்லை
இவள் தடுமாறாமல், மகிழ்ச்சியாய் நடக்கிறாள்
ஆனால் இது சொல்வேன்
என் வாகன சன்னலில் பார்க்கிறாளே
இவளது கண்கள் பெரியவை
மிகப் பெரியவை
இவள் மயிர் கலைந்திருக்கிறது, இதழ்களில் சந்தேகம்
இதையும் சொல்வேன்
திறந்த கண்களுடன் நடைபாதையில் கிடக்கிறாளே
இவளை உன்னால் காயப்படுத்த முடியுமா?
அஞ்சும் அக்கண்களில் பாதம் பதிக்க முடியுமா
சாவதற்கு இவள் ஏன் பயப்பட வேண்டும்?
இது ஒரு தவறு
இது ஒரு தவறு இதில் எனக்கொரு பங்குண்டு
(This is an unauthorised translation of the poem, “In Times of Famine: Bengal”, originally written in English by C.H. Sisson. This Tamil translation is intended for educational, non-commercial display at this particular webpage only).