நினைவு – ஏ. நஸ்புள்ளாஹ் கவிதை

ஏ. நஸ்புள்ளாஹ்

நினைவு நகர்ந்து நகர்ந்து
கடலில் இறங்குகிறது

எனது படுக்கையறையிலிருந்து
நழுவிய நினைவு அது

பால்யம் தாழ்ப்பாள் இட்டுக் கொள்ள
பிரிந்து
ஒதுங்கிய நினைவு அது

இரவைக் கடப்பதைப் போல
அல்லது
ஒரு கடலைக் கடப்பதைப் போல
நினைவைக் கடக்க முடியவில்லை

நினைவோடு சேர்ந்து
நானும் கடலில் இறங்குகிறேன்

இச்சம்பவத்தை மேசைமீது
வைத்திருக்கிறேன்
முடியுமானவர்கள் கவிதை எழுதிக் கொள்ளுங்கள்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.